பேரறிவாளனின் பரோலை நீட்டிக்க முதல்வர் எடப்பாடியாரிடம் தமிமுன் அன்சாரி நேரில் வலியுறுத்தல்
பேரறிவாளனின் பரோலை நீட்டிக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடன் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.
நாகை: பேரறிவாளனின் பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இன்று நாகப்பட்டினத்திற்கு முதல்வர் எடப்பாடியார் வருகை தந்தார். எம்.எல்.ஏ. என்ற அடிப்படையில், பயணியர் மாளிகையில் முதல்வர் எடப்பாடியாரை தமிமுன் அன்சாரி சந்தித்து சால்வை அணிவித்து மரியாதை செய்தார்.

அப்போது பேரளிவாளனுக்கு பரோலை மேலும் 1 மாதம் நீட்டித்து தர வேண்டும் என்ற கோரிக்கை மனுவையும், 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் தண்டனைக் கைதிகளை சாதி, மத, அரசியல், வழக்கு பேதமின்றி விடுதலை செய்ய வேண்டும் என்ற மனுவையும் கொடுத்து அது குறித்து விவாதித்தார்.
பேரளிவாளனின் பரோல் நீட்டிப்பு குறித்து, சட்ட வல்லுநர்களிடம் கருத்து கேட்பதாகவும், சிறைவாசிகள் விடுதலை குறித்து வேகமாக பணிகள் நடைப்பெற்று வருவதாகவும், இதில் உச்சநீதி மன்றத்தின் வழிகாட்டல்படி பாரபட்சமின்றி நடப்போம் என்றும் முதல்வர் உறுதியளித்திருக்கிறார்.
பிறகு நாகப்பட்டினம் தொகுதி கோரிக்கைகளின் பட்டியலையும் முதல்வர் எடப்பாடியாரிடம் தமிமுன் அன்சாரி வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்வர் எனது தொகுதிக்கு வருகை தந்திருக்கிறார். அவரை வரவேற்பதும், மரியாதை செய்வதும் ஒரு அரசியல் நாகரீகம்.
அந்த அடிப்படையில் அரசியல் கருத்து வேறுபாடுகளை கடந்து தொகுதி கோரிக்கைகளையும், இதர மக்கள் கோரிக்கைகளையும் அவரிடம் வலியுறுத்தினேன் என்றார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications