48 ஆண்டுகால தாமிரபரணி பாலம் கனவு திட்டம் பாதியில் நிற்கிறது! வருவாய்த்துறை மனம் இறங்குமா?
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட மக்களின் 48 ஆண்டு கால கனவு திட்டமான கருங்குளம் & கொங்கராயகுறிச்சி ஆற்றுபாலத்திட்டம் 75 சதவீதம் பணி முடிந்த நிலையில் நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ளது கொங்கராயகுறிச்சி. இதை சுற்றி சுமார் 10க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. இவர்கள் முக்கியமான வேலைக்கும், மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கும் செல்ல தாமிரபரணி ஆற்றைக் கடந்து கருங்குளம் கரைக்கு தான் வர வேண்டும். ஆகவே இந்த இடத்தில் பாலம் கட்ட வேண்டும் என்று சுமார் 48 ஆண்டு காலமாக மக்கள் போராடி வந்தனர்.

இந்த பாலம் அமைக்க நபார்டு வங்கி மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 16 கோடியே 50 லட்சம் செலவில் பாலம் கட்ட கடந்த ஜுலை மாதம் 12 ந்தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. 19 கண்கள் கொண்ட உயர்மட்ட பாலம் 12 மீட்டர் அகலத்தில் கட்டும் பணி மிக வேகமாக துவங்கியது. கொங்கராயகுறிச்சியில் இருந்து சுமார் 75 சதவீத வேலை முடிந்து விட்டது. ஆனால் மீதி வேலையை முடிக்காமல் ஒப்பந்தகாரர்கள் பணியை கடந்த வாரம் நிறுத்தி விட்டு சென்று விட்டனர்.
கருங்குளம் பகுதியில் பாலம் கட்டும் இடத்தினை வருவாய் துறையினர் கையகபடுத்தி தரவில்லை என்று காரணம் கூறுகிறார்கள். எனவே வருவாய் துறையினர் இதில் தலையிட்டு இடத்தினை கையகப்படுத்தி உடனடியாக நிறுத்தப்பட்ட வேலையை துவங்கி வரும் மழை காலத்துக்குள் வேலையை முடித்து தரவேண்டும் என்பது பொதுமக்கள் எதிர்பார்ப்பு.
ஏப்ரல் மே மாதத்தில் தான் ஆற்றில் தண்ணீர் குறைவாக வரும். இந்த சமயத்தில் ஆற்றில் தண்ணீர் வரும் பகுதியில் வேலை நடத்தலாம் என்று திட்டமிட்டிருந்தனர். தற்போது ஆற்று தண்ணீர் செல்லும் இடத்தில் தான் வேலை நடக்க வேண்டியது உள்ளது. எனவே உடனே வேலையை ஆரபிக்க வருவாய் துறையினரும், நெடுஞ்சாலை துறையினரும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications