தேடப்படும் குற்றவாளி அன்புச்செழியனுடன் முதல்வர் பேசினாரா? - தங்க தமிழ் செல்வன்
தேடப்படும் குற்றவாளி அன்புச்செழியனுடம் முதல்வர் பேசியதாக வெளியான தகவல் அதிர்ச்சி தருகிறது என்று தினகரன் ஆதரவாளர் தங்க. தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
சென்னை: தேடப்படும் குற்றவாளி அன்புச்செழியனுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியது உண்மை என்றால் கண்டிக்கத்தக்கது என டி.டி.வி. தினகரன் ஆதரவாளர் தங்க. தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.
தேடப்படும் குற்றவாளி அன்புச்செழியனுடம் முதல்வர் பேசியதாக வெளியான தகவல் அதிர்ச்சி தருகிறது என்று தங்க. தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். கொடைக்கானலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.
நடிகரும் இயக்குநருமான சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் கடந்த வாரம் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். இவரது தற்கொலைக்கு முக்கிய காரணமாக பைனான்சியர் அன்புச்செழியனிடம் வாங்கிய கடன்தான் காரணம் என்று அவர் தற்கொலை கடிதத்தில் எழுதி வைத்துள்ளார்.
இதுதொடர்பாக சசிகுமார் அளித்த புகாரை அடுத்து அன்புச்செழியன் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் அன்புச்செழியன் தலைமறைவாகி விட்டார். அன்புசெழியனுக்கு ஆதரவாகவும்,எதிராகவும் கருத்துக்கள் வெளியாகின.
அன்புச்செழியனை வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வதை தடுக்க, லுக் அவுட் நோட்டீஸை காவல்துறையினர் விமான நிலையங்களுக்கும் அளித்துள்ளனர். காவல்துறை அன்புச்செழியனை தீவிரமாக தேடிவரும் நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அன்புசெழியனுடன் பேசியதாக தகவல் வெளியானது.
தேடப்படும் குற்றவாளி அன்புச்செழியனுடம் முதல்வர் பேசியதாக வெளியான தகவல் அதிர்ச்சி தருகிறது என்று தங்க. தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். கொடைக்கானலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தேடப்படும் குற்றவாளி அன்புச்செழியனுடம் முதல்வர் பேசியதாக வெளியான தகவல் அதிர்ச்சி தருகிறது என்று அவர் கூறியுள்ளார்.