ஜல்லிக்கட்டை நடத்த முடியாத அரசாங்கம் யாருக்காக இனி இயங்க வேண்டும்? தங்கர் பச்சான் கொந்தளிப்பு
ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் போனதற்கு இயக்குநர் தங்கர் பச்சான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜல்லிக்கட்டை நடத்த முடியாத கட்சிகளும், அரசாங்கமும் யாருக்காக இனி இயங்க வேண்டும்? என இயக்குநர் தங்கர் பச்சான் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தங்கர் பச்சான் பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளதாவது:
நிலை கொள்ளாமல் தமிழ் இளைஞர்கள் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். தமிழக கட்சிகள் தனித்தனியாக தங்களின் கடமையை முடித்துக்கொண்டன. தமிழக அரசு மத்திய அரசின்மேல் பழிபோட்டு ஒதுங்கிக்கொண்டது.

தமிழர்களின் உரிமைக்காகவும்,உணர்வுக்காகவும் மதிப்பளித்து ஒன்று சேர்ந்து மத்திய அரசை பணிய வைத்து ஜல்லிக்கட்டை நடத்த முடியாத கட்சிகளும்,அரசாங்கமும் யாருக்காக இனி இயங்க வேண்டும்?
இளைஞர்களிடத்தில் உருவாகி இருக்கின்ற புதிய "தீ" பற்றி யாருக்கும் புரியவில்லை. இரண்டு நாளில் அடங்கிப்போய்விடும் என எப்பொழுதும்போல் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். பல கூறுகளாக பிரிந்து கிடக்கும் தமிழினம் ஒன்று சேர்ந்து கொண்டிருக்கிறது. தங்களின் துரோகிகள் யார் யார் என்பதை உணரத்தொடங்கியிருக்கிறது.

இனி எதற்காக எங்களுக்கு இந்த சட்டமன்ற,நாடாளுமன்ற (MLA,MP) உறுப்பினர்கள்? மக்களுக்காகத்தான் என்றால் அனைத்து கட்சிகளும்,அனைத்து உறுப்பினர்களும் இன்றே,இப்பொழுதே ஒன்று கூடி நடவடிக்கையில் இறங்கி ஜல்லிக்கட்டை நடத்திக்காட்டுங்கள். முடியாது என்றால் கட்சிகளை கலைத்துவிட்டு பதவியிலிருந்து விலகுங்கள். பிறகு நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.
ஒவ்வொரு தமிழனின் குரலும் இதுதான்! செய்வீர்களா? இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications