முடிஞ்சா ஒருத்தரை இழுத்துடுங்க.. நாங்க மொத்த வந்துர்றோம்.. தங்க தமிழ் செல்வன் சவால்
எங்கள் அணியிலிருந்து ஒருவரையாவது இழுத்துவிடுங்கள். நாங்கள் மொத்தமாக எடப்பாடி பக்கம் வருகிறோம் என்று தங்கதமிழ் செல்வன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: எங்கள் அணியிலிருந்து ஒருவரையாவது எடப்பாடி பழனிச்சாமி இழுத்து க் கொள்ளட்டும் அவர் பக்கம் நாங்கள் மொத்தமாக சென்று விடுகிறோம் என்று தங்க தமிழ் செல்வன் சவால் விடுத்துள்ளார்.
முதல்வருக்கு எதிராக அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் திநகர் தரப்பு 18 எம்எல்ஏக்கள் புகார் கடிதம் கொடுத்தனர். இது கொறடா உத்தரவுக்கு புறம்பான செயல் என்று கூறி 18 பேரையும் தகுதி நீக்கம் செய்தார் சபாாநயகர்.

முடிவில் தவறில்லை
இதை எதிர்த்து 18 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினர். இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 2 தினங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி சபாநாயகர் முடிவில் தவறில்லை என்றும் நீதிபதி சுந்தர் சபாநாயகர் முடிவில் தவறு என்றும் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர்.

எடப்பாடி பழனிச்சாமியால்...
இதனால் இந்த வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டது. 3-ஆவது நீதிபதியாக விமலாவை மூத்த நீதிபதி குலுவாடி ரமேஷ் நியமித்தார். இந்நிலையில் சென்னையில் நடந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு தங்கதமிழ் செல்வன் அளித்த பேட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களும் ஓரணியில் உள்ளோம். ஒருவரை கூட எடப்பாடி பழனிச்சாமியால் இழுக்க முடியாது.

நம்பிக்கை இல்லை
யாரும் எடப்பாடி அணிக்கு செல்ல தயாரில்லை. 18 பேரில் ஒருவரை இழுத்தாலும் கூட நாங்கள் மொத்தமாக எடப்பாடி பக்கம் செல்ல தயார். நீதிமன்ற தீர்ப்பில் நம்பிக்கை இல்லாததால் வழக்கு வாபஸ் பெறுகிறேன்.

மக்கள் பணி
எஞ்சிய 17 எம்எல்ஏக்கள் வழக்கை சந்திப்பது அவரவர் விருப்பம். எனது தொகுதி மக்களுக்கு பணியாற்ற எம்எல்ஏ வேண்டும் என்றார் தங்கத் தமிழ்ச்செல்வன்.












Click it and Unblock the Notifications