தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 21-ந் தேதி கூடுகிறது
சென்னை: தமிழக சட்டசபை வரும் 21-ந் தேதி கூடுகிறது. இக்கூட்டத் தொடரில் 2016-17-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
தமிழகத்தில் கடந்த மே 16-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுக அதிக இடங்களை கைப்பற்றி, முதல்வர் ஜெயலலிதா தலைமையில் மீண்டும் ஆட்சி அமைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, இந்த ஆண்டுக்கான முதல் சட்டசபை கூட்டம் கடந்த மாதம் 16-ந் தேதி நடைபெற்றது. அன்றைய தினம் தமிழக ஆளுநர் ரோசய்யா உரையாற்றினார்.

இதைத்தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் 4 நாட்கள் நடைபெற்று சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழக அரசின் 2016-2017ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 21-ந் தேதி கூடுகிறது என பேரவை செயலர் ஜமாலுதீன் அறிவித்துள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 21-ந் தேதியன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது என தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத் தொடரில் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 2016-2017ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வார்.
இதைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம், துறை வாரியான மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறும்.












Click it and Unblock the Notifications