இனி குடித்தால் பிள்ளைகளுடன் எங்காவது போய் விடுவேன்.. மனைவி மிரட்டல்.. கணவர் தூக்கிட்டு தற்கொலை
கூலி தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
Recommended Video

மேட்டுப்பாளையம்: தினமும் குடித்துவிட்டு வந்தால் பிள்ளைகளுடன் எங்காவது போய் விடுவதாக மனைவி கண்டித்ததால் மனமுடைந்த தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.
அன்னூர் சாலையில் ஜீவானந்தபுரம் பகுதியில் வசித்து வருபவர் வடிவேல். இவருக்கு 38 வயதான இவர் கட்டிட தொழிலை செய்து வந்தார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். காலையிலிருந்து பொழுது முடியும்வரை கட்டிட வேலையில் கடுமையாக உழைத்து வந்தாலும், சாயங்காலம் ஆகிவிட்டால் மது அருந்தாமல் இவரால் இருக்க முடியாமல் போய்விடுகிறது.

தினமும் மது அருந்துவதையே பழக்கமாக வைத்திருந்திருக்கிறார் வடிவேல். வீட்டுக்கு குடித்துவிட்டு வரும்போதெல்லாம் அன்று மனைவியுடன் தகராறுதான். பல முறை தன் கணவரிடம் குடிக்க வேண்டாம் என்று ராஜேஸ்வரி எடுத்து சொல்லியும், அப்போதைக்கு சரி என்று சொல்லும் வடிவேல் இரவு வரும்போது மதுபோதையுடனே வீட்டுக்கு வருவாராம். மீண்டும் தகராறு - வாக்குவாதம்.
இதேபோல சம்பவத்தன்றும் குடித்துவிட்ட வடிவேலுவை கண்டித்துள்ளார் ராஜேஸ்வரி. ஆனால், அதனை கொஞ்சமும் காதிலேயே வாங்கி கொள்ளாமல் தூங்க சென்றுவிட்டார் வடிவேல். மறுநாள் காலையில் தூங்கி கொண்டிருந்த வடிவேலுவை எழுப்பிய ராஜேஸ்வரி, எவ்வளவு சொல்லியும் கேட்காமல் தினமும் இப்படி குடித்துவிட்டுத்தான் வருகிறீர்கள், இனியும் இப்படி குடித்தால் பிள்ளைகளை கூட்டிக் கொண்டு எங்காவது சென்றுவிடுவேன் என்று சொல்லிவிட்டு, அருகிலுள்ள கோயிலுக்கு சென்றுவிட்டார்.
இதனால் வெறுப்பான வடிவேல், அறையினுள் இருந்த மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். நீண்ட நேரம் அக்கம்பக்கத்திலுள்ளோர் ராஜேஸ்வரியை பார்க்க வீட்டிற்குள் வந்தனர். அப்போது வடிவேல் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்து மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வடிவேலு ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனையில் தெரிவிக்கப்பட்டு விட்டது. இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications