சென்னையில் கனமழை, வெள்ளத்தை 5 நாட்களுக்கு முன்பு அறிவிக்கும் முன்னெச்சரிக்கை அமைப்பு தொடக்கம்
சென்னையில் வெள்ள பாதிப்புகளை தடுக்க வெள்ள முன்னெச்சரிக்கை அமைப்பு திறக்கப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: வெள்ள பாதிப்புகளை தடுக்க வெள்ள முன்னெச்சரிக்கை அமைப்பு திறக்கப்பட்டுள்ளது
தமிழகத்திற்கு அதிக மழை பொழிவை கொடுக்கும் வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு கொட்டித்தீர்த்த கனமழையால் சென்னை மாநகர் வெள்ளத்தில் தத்தளித்தது.
இந்நிலையில் இந்த ஆண்டு மழை மற்றும் வெள்ள பாதிப்பை எதிர்கொள்ளும் வகையில் சென்னையில் முன்னெச்சரிக்கை அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.

5 நாட்களுக்கு முன்பே
இதுதொடர்பாக சென்னை எழிலகத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, கனமழை மற்றும் வெள்ளத்தை 5 நாட்களுக்கு முன்பே தெரிவிக்கும் வகையில் வெள்ள முன்னெச்சரிக்கை அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இணையதளத்தில் புகார்
தமிழகத்தில் மழை பாதிப்பு தொடர்பாக http://gdp.tn.gov.in என்ற இணையதளத்தில் புகார்கள் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

வருவாய் துறையினர் ஒப்பந்தம்
மழையின் நிலை மற்றும் தீவிரம் குறித்து முன்கூட்டியே தெரிந்து கொள்ளும் வகையில் தேசிய கடல் ஆராய்ச்சி மையத்துடன் வருவாய் துறையினர் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

5000 அலுவலர்கள் நியமனம்
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக உள்ளோம். மக்களின் புகார் தொடர்பான மனுக்களை பரிசீலிக்க 5000 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 32 மாவட்டங்களிலும் நேரடியாகவும், காணொலிக்காட்சி மூலமாகவும் ஆய்வு பணிகள் தொடரும். இவ்வாறு அமைச்சர் ஆர்பி உதயக்குமார் தெரிவித்தார்.
-
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications