For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏழை மக்களை மதியாத அரசு சரியும்.. ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து கமல்ஹாசன் ஆதங்கம்

ஏழை மக்களை மதியாத அரசு சரியும் என்று தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் பற்றி கமல்ஹாசன் ஆதங்கமாக டிவிட் செய்து இருக்கிறார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

தூத்துக்குடி: ஏழை மக்களை மதியாத அரசு சரியும் என்று தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் பற்றி கமல்ஹாசன் ஆதங்கமாக டிவிட் செய்து இருக்கிறார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 49 ஆம் நாளாக போராடும் குமரெட்டியாபுர மக்களுடன் மக்களாக அமர்ந்து கமல்ஹாசன் களமிறங்கி உள்ளார். போராட்ட களத்தில் மக்களை சந்திக்க மக்கள் நீதி மய்யம் சார்பாக கமல்ஹாசன் இன்று தூத்துக்குடி சென்றார்.

The Government which doesnt respect its people will fall down says, Kamal Haasan

தூத்துக்குடியில் மக்கள் மத்தியில் கமல்ஹாசன் பேட்டி அளித்தார். இதில் ஸ்டெர்லைட் விவகாரம் எவ்வளவு கொடியது என்று அவர் பேட்டி அளித்தார்.

மக்களின் போராட்டத்திற்கு எப்போது துணையாக இருப்பேன் என்றும் கூறினார். இந்த நிலையில் தற்போது அந்த போராட்டம் குறித்து டிவிட் செய்து இருக்கிறார்.

அதில் ''அன்பு வீசும் அந்த குமாரரெட்டிபுர வேப்பமரத்தடியில் சற்று நேரம் அமர்ந்து பார்த்தால் மக்கள் பற்றிய ஞானம் வரும்.தாய்யுள்ளங்களின் ஓலம் கேட்டேன். ஏழை மக்களை மதியாத அரசு சரியும். மக்களே மய்யம் வாய்மையே வெல்லும்'' என்றுள்ளார்.

English summary
The Government which doesn't respect its people will fall down says, Kamal Haasan in Twitter. The government didn't listen to people voice in Sterlite protest says Kamal Haasan. He extends his support to people protest in Tuticorin.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X