மாசியிலேயே வெயில் பட்டைய கிளப்புதே... கூடவே #கொசுக்கடி
மாசி மாதம் மச்செல்லாம் குளிரும் என்பார்கள். இங்கே வியர்வையில் குளிக்க வேண்டியிருக்கிறது. அந்த அளவிற்கு வெப்பம் தகிக்கிறது.
சென்னை: பங்குனி மாதம் போல வெயில் இப்போதே பட்டையை கிளப்பி வருகிறது. சென்னையில் 87 டிகிரி பாரன்ஹீட் அளவு வெப்பம் பதிவாகியுள்ளது.
மதுரையில் 93 டிகிரி அளவு பாரன்ஹீட் அளவு வெப்பமும், வேலூரில் 92 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும் பதிவாகியுள்ளது. பகலெல்லாம் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இரவில் புழுக்கம் கூடவே கொசுக்கடியின் தாக்கமும் அதிகமாகவே உள்ளது.
இப்பவே இப்படின்னா, இனி பங்குனி, சித்திரை மாதங்களில் சூரியன் உச்சத்திற்கு வரும் போது என்ன பாடு படனுமோ என்று பலரும் பதறுகின்றனர். அக்னி நட்சத்திர வெயிலை சமாளிக்க என்ன செய்யலாம் என்று இப்போதே திட்டமிடுகின்றனர். சமூக வலைத்தளங்களில் வெயிலை சமாளிக்க சிலர் ஐடியாவும் கொடுத்துள்ளனர். படிங்க... ரசிங்க மக்களே.
|
நடந்துக்கிட்டே குளிக்கலாம்
வெயில் கொடுமையை தாங்க முடியாமல் நடந்து கொண்டே குளிக்கிறார் ஒருவர். இவர் செல்லூர் ராஜூவுக்கே ஐடியா கொடுப்பார் போல இருக்கே.
|
அடிக்குது வெயிலு
வெயில் தாங்கலையே... 4 மாசம் பேசமா உள்ள இருக்கலாம் என்று பதிவிட்டுள்ளார் ஒரு வலைஞர்.
|
வாட்டி வறுக்குதே
நாட்டில் நடக்கும் பிரச்சனைகளை பார்த்து யார் கோபம் காட்டுகிறார்களோ தெரியவில்லை, ஆனால் இயற்கை நன்றாகவே காட்டுகிறது - நெல்லையை வச்சு செய்யுது வெயில் என்று கவலை தெரிவித்துள்ளார் ஒரு வலைஞர்.
|
கொசுவின் முத்தம்
வெப்பத்தால் புழுக்கம் ஒருபக்கம் அதிகரிக்க, கூடவே கொசுக்கடியும் சேர்ந்து கொண்டது. இதில் பாதிக்கப்பட்ட ஒரு வலைஞரோ, இரவு முழுவதும் என் அனுமதியின்றி முத்த மழை பொழிந்து என் தூக்கத்தை கலைக்கின்றாய்...#கொசுக்கடி என்று பதிவிட்டுள்ளார்.
|
கொதிக்கும் பிப்ரவரி
கடந்த ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி வெயில் தகித்துள்ளது. சேலம், தர்மபுரியில் அதிக அளவு வெப்பம் பதிவாகியுள்ளது. அதை பார்க்கும் போது இந்த ஆண்டு வெயில் கொஞ்சம் பரவாயில்லைதான் போல.












Click it and Unblock the Notifications