உயிரோடு இருக்கும் போது அம்மா.. இறந்தபின் ஜெயலலிதாவா? விட்டு விளாசிய ஹைகோர்ட் நீதிபதி
காலையில் மாலைப்போடுவதும், மாலையில் காலை வாரி விடுவதுமே தமிழகத்தின் தலைவிதியாகி விட்டதாக உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: ஜெயலலிதாவின் மகள் என்று உரிமைகோரும் அம்ருதாவின் வழக்கை விசாரித்த நீதிபதி இவ்வாறு தெரிவித்தார். ஜெயலலிதாவை அம்மா என்று அழைத்தவர்கள் அவரை தற்போது பெயர் கூறி அழைப்பதாகவும் அவர் விசாரணையில் குறிப்பிட்டார்.
பெங்களூருவை சேர்ந்த அம்ருதா என்பவர் தான் ஜெயலலிதாவின் மகள் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை உயர்நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இந்த வழக்கு சென்னை ஹைகோர்ட் நீதிபதி வைத்தியநாதன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

சோபன்பாபுவை தந்தை எனவில்லை
அம்ருதா, அவரின் உறவினர்கள் லலிதா மற்றும் ரஞ்சினி ஆகியோர் ஜெயலலிதாவின் உடலை பிராமண முறைப்படி தகனம் செய்ய வேண்டும் என்றும் தங்கள் மனுவில் கேட்டிருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ஜெயலலிதாவை தாய் என்றும் கூறும் அம்ருதா, சோபன்பாபுவை தந்தை என்று கூறாதது ஏன்? என்றார்.

அப்பல்லோவில் ரத்த மாதிரி இருக்கனுமே
ஜெயலலிதாவின் வாரிசு விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மரபணு சோதனை நடத்துவதற்கு ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள் அப்போல்லோவில் உள்ளனவா? என்றும் கேள்வி எழுப்பினார்.

ஆறுகோடி பேரும் வந்தால்
மேலும் ஜோசப் என்பவரும் இந்த வழக்கில் தன்னை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று நீதிபதியிடம் இந்த வழக்கின் விசாரணையின் போது மனு அளித்தார். இதனால் எரிச்சலடைந்த நீதிபதி, ஜெயலலிதாவின் வாரிசு என்று தமிழகத்தில் உள்ள ஆறு கோடி பேர் வந்தால், நீதிமன்றத்தை மெரினா கடற்கரைக்கு தான் மாற்ற வேண்டி வரும் என்றார்.

அம்மா சொன்னார்கள்
உயிருடன் இருக்கும் போது அம்மா என்று அழைத்தவர்கள் எல்லாம் தற்போது ஜெயலலிதாவை பெயர் சொல்லி அழைகின்றனர். காலையில் மாலைப்போடுவதும் மாலையில் காலை வாரி விடுவதுமே தமிழகத்தின் தலைவிதியாகி விட்டதாகவும் நீதிபதி வைத்தியநாதன் கூறினார். இவ்விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டு தலைமை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications