மானியம் இல்லா சமையல் எரிவாயு விலை இன்று முதல் அதிகரிப்பு.. 5வது மாதமாக விலைவாசி ஏறுமுகம்
சென்னை: மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஜனவரி 1ம் தேதியான இன்று முதல், அதிகரித்துள்ளது. இதன் மூலம் தொடர்ச்சியாக ஐந்தாவது மாதமாக எரிவாயுவின் விலை அதிகரிப்பை சந்தித்துள்ளது.
கொல்கத்தா நகரில் ஒரு சிலிண்டரின் விலை ரூபாய் 21.5 என்ற அளவுக்கு அதிகரித்து 747 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சென்னையில் ஒரு சிலிண்டரின் விலை 20 ரூபாய் அதிகரித்து 734 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

டெல்லி மற்றும் மும்பையில், இந்த உயர்வு முறையே சிலிண்டருக்கு ரூ .19 மற்றும் ரூ .19.5 ஆக உயர்ந்துள்ளது என்று இண்டேன் பிராண்டின் கீழ் எல்பிஜி வழங்கும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது. ஜனவரி 1 முதல், மானியமில்லாத எல்பிஜி காஸ் சிலிண்ர் டெல்லியில், சிலிண்டருக்கு ரூ .714 ஆகவும், மும்பையில் சிலிண்டருக்கு ரூ .684.50 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதுதவிர மானிய விலையில் ஒரு குடும்பத்திற்கு ஆண்டுதோறும் 12 சிலிண்டர்கள் வழங்கப்படுகின்றன. இதன் எடை 14.2 கிலோ கிராம். அந்த அளவைத் தாண்டி சமையல் எரிவாயு தேவைப்பட்டால் சந்தை விலையில் அவர்கள் பணம் கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஜனவரி 1ம் தேதியான இன்று முதல் ரயில் கட்டணங்களும் அதிகரிப்புக்கு உள்ளாகியுள்ளன. ஏசி பெட்டிகளுக்கு ஒரு கிலோமீட்டருக்கு நாலு பைசா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏசி வசதியற்ற ரயில்பெட்டிகளுக்கான கட்டணம் ஒரு கிலோமீட்டருக்கு ஒரு பைசா அளவுக்கு அதிகரிப்புக்கு உள்ளாகியுள்ளது.
சில்லறை சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை கிலோவுக்கு ரூ.120, சின்ன வெங்காயத்தின் விலை கிலோ 200 ரூபாய் என்ற அளவில் விற்பனையாகி வருகிறது. இவ்வாறு அனைத்து நுகர்வுப் பொருட்களின் விலையும் கடந்த சில மாதங்களில் சரமாரியாக உயர்வைக் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications