விஜயகாந்தின் டெல்லி பயணத்தின் ரகசியம்: சொல்கிறார் மைக்கேல் ராயப்பன்
சென்னை: கூட்டணி குறித்து பேரம் பேசத் தான் தேமுதிக தலைவர் விஜயகாந்த் டெல்லி செல்லும் நாடகத்தை நடத்தியிருக்கிறார் என்று அக்கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ. மைக்கேல் ராயப்பன் தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் டெல்லி சென்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசினார். இது குறித்து தேமுதிகவின் அதிருப்தி எம்.எல்.ஏ.வான மைக்கேல் ராயப்பன் கூறுகையில்,

தமிழக பிரச்சனைகள் பற்றி பிரதமரிடம் தெரிவிக்க வேண்டும் என்பதற்காக டெல்லி சென்றேன் என விஜயகாந்த் தெரிவித்துள்ளார். பிரதமரை சந்தித்து பேசினால் காங்கிரஸுடன் கூட்டணி சேர்ந்துவிடுவாரோ என்று நினைக்கும் பாஜகவிடம் கூடுதல் சீட் கேட்டு பேரம் பேசலாம், அப்படியே பிற கட்சிகளையும் பேரம் பேச வைக்கலாம் என்பதுவே விஜயகாந்தின் திட்டம் ஆகும்.
அதற்குத் தான் அவர் எம்.எல்.ஏக்ளுடன் டெல்லி செல்லும் நாடகத்தை நடத்தினார். அவருக்கு மக்கள் மீது எல்லாம் எந்தவித அக்கறையும் இல்லை. ஊழல் எதிர்ப்பு மாநாடு நடத்திய அவர் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் 3 கட்சிகளில் ஊழல் இல்லா கட்சி ஒன்று உண்டா? அந்த கட்சியில் உள்ளவர்கள் அவரைப் பற்றி விரைவில் புரிந்து கொள்வார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications