பழனியில் வழிப்பறி கொள்ளையரை பிடிக்க முயன்ற எஸ்.ஐ.க்கு கத்திக்குத்து.. மருத்துவமனையில் அனுமதி
வழிப்பறி கொள்ளையரை பிடிக்க முயன்ற எஸ்ஐக்கு கத்திக்குத்து விழுந்தது.
கோவை: பழனியில் திருட்டு வழக்கில் தொடர்புடைய குற்றவாளியை பிடிக்க முயற்சி செய்த எஸ்.ஐ., கத்தியால் பலமாக தாக்கப்பட்டார். இதையடுத்து, அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் மே-30ம் தேதி பெண்ணிடம் மர்ம நபர்கள் 8 பவுன் தங்க நகையை பறித்து சென்றனர். இதுகுறித்து பேரூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். இன்ஸ்பெக்டர் தங்கபாண்டியன் தலைமையில், எஸ்ஐ ஆறுமுகநயினார் உள்ளிட்ட 3 பேர் தனிப்படையினர் வழிப்பறிக் கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் பழநியில் முகாமிட்டு இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் தனிப்படையினர் விரைந்தனர்.

அப்போது தெற்கு கிரி வீதி நகராட்சி டோல்கேட் அருகே, காரில் வேகமாக வந்தவர்களை சந்தேகத்தின் பேரில் தனிப்படையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது காரில், விக்னேஷ், யாசிக் அகமது உள்ளிட்ட 3 பேர், மூன்று பெண்கள், 12 வயது சிறுவன் ஆகியோர் இருந்தனர். விசாரித்தபோது, முன்னுக்குபின் முரணாக பதில் அளித்ததால் போலீசார், அவர்களை கைது செய்ய முயன்றனர்.
அப்போது, எஸ்ஐ ஆறுமுக நயினாருக்கு கழுத்து பகுதியில் பலத்த கத்திக்குத்து விழுந்தது. இதையடுத்து தப்பிக்க முயன்ற கொள்ளையர்களை பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர். இதனையடுத்து படுகாயமடைந்த எஸ்ஐ ஆறுமுகநயினார் பழனியில் முதலுதவி சிகிச்சை முடிந்த பின்னர் , கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications