Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்த்தாய் வாழ்த்தும், ஆளுநரின் சர்சசையும்.. பெரிசுபடுத்தாதீங்க.. சொன்னது யார் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

ஆம்பூர்: தமிழகம் முழுவதும் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சைக்கும், ஆளுநருக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும்,
தேர்தலுக்காக செயல்படும் அரசாக மட்டுமே திமுக உள்ளது என்றும் தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, ஆம்பூரில் செய்தியாளர்களுக்கு பிரேமலதா விஜயகாந்த் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: சென்னையில் மழை வெள்ளம் ஒருநாள் தான் வந்தது. ஆனால், அந்த மழை வெள்ளத்துக்கே சென்னை தாங்கவில்லை. அந்தப் பிரச்னையை சரிசெய்யாமல் விட்டுவிட்டு மீனவர்களையும், படகுகளையும் வாடகைக்கு எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

governor ravi dmdk premalatha

தீபாவளிப் பண்டிகை வரவுள்ள நிலையில் ஏராளமான பொதுமக்கள் விடுமுறையில் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று வருவார்கள். பொதுமக்கள் பயணம் செய்ய போதிய எண்ணிக்கையிலான பேருந்துகள் தமிழக அரசிடம் இல்லை. பண்டிகைக்காக தனியாரிடம் இருந்து பேருந்துகளை வாடகைக்கு எடுக்கின்ற நிலையே தற்போது உள்ளது. வாடகைக்கு எடுத்து போக்குவரத்து சேவை அளிக்கும் அளவுக்குத்தான் தமிழக அரசின் நிலை உள்ளது.

இதுபோல மற்றவர்களை நம்பி தான் இந்த அரசு இருக்கிறது என்றால் அந்த அரசு தேவையில்லை என்றுதானே அர்த்தம். வெள்ளத்தின்போது மீனவர்கள், படகு, தற்போது பண்டிகைக்காக பேருந்து உள்ளிட்ட அனைத்தையும் வாடகைக்கு எடுக்கும் அரசை வாடகை அரசாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது. பொதுவாக தமிழக மக்கள் அனைவரும் பயணிக்கின்ற அளவுக்கு போதிய எண்ணிக்கையில் பேருந்துகள் இல்லை.

தற்போது இயக்கப்பட்டு வரும் பேருந்துகளே மிகவும் மோசமான நிலையில்தான் இயக்கப்பட்டு வருகின்றன. வடகிழக்குப் பருவமழை துவங்கியுள்ள நிலையில், சென்னையில் ஒரு நாள் பெய்த மழைக்கே சென்னையின் நிலைமை இப்படியாகிவிட்டது. டிசம்பர் மாதத்தில் பெருமழை வரப்போகிறது. அப்போது என்ன நிலை ஏற்படும் என்பது தெரியவில்லை.

governor ravi dmdk premalatha

ஒரு நாள் மழை வெள்ளத்தை வடியவைத்துவிட்டு அதையே பெரிய சாதனை என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். டிசம்பர் மாதத்தில் வரவிருக்கும் பெருமழைக்கு இப்போதே முறையாக திட்டமிட வேண்டும். வெள்ள பாதிப்புகளுக்கு சரியான நிரந்த தீர்வு காண வேண்டும்.

தமிழகத்தில் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. கஞ்சா, கள்ளச்சாராயம், டாஸ்மாக், வேலையின்மை, நெசவுத் தொழில் படுபாதாளத்தில் உள்ளது. திமுக கூறிய எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. ஆட்சிக்கு வந்த உடன் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று உதயநிதி கூறினார். ஆனால், நீட் தேர்வை இதுவரை ரத்து செய்யவில்லை.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் நிகழ்ந்த தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பான சர்ச்சைக்கும், ஆளுநருக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. அப்போது அங்கு ஏற்பட்ட தவறுக்கு தூர்தர்ஷன் சார்பில் மன்னிப்பு கோரிவிட்டது. அதோடு அந்தப் பிரச்னை முடிந்துவிட்டது. திமுகவினர் அதை பெரிதுபடுத்தக் கூடாது. ஆளுநரை தொடர்ந்து திமுகவினர் இகழ்ந்து பேசி வருகின்றனர்.

தேர்தலுக்காக செயல்படும் அரசாக மட்டுமே திமுக உள்ளது. மக்களுக்காக அவர்கள் செயல்படவில்லை. தமிழகத்தில் சர்க்கரை ஆலைகள், தோல் காலணி தொழிற்சாலைகள் மூடப்பட்டு வரப்படுவதைத் தடுக்காமல் வேடிக்கை பார்க்கின்றனர். ஆனால், வெளிநாடுகளுக்குச் சென்று தொழில் முதலீடுகளை ஈர்த்து வருகிறோம் என்று கூறிக் கொண்டு குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருகின்றனர்.

தமிழகத்தில் நலிவடைந்துள்ள தொழிற்சாலைகளையும் நலிவடைந்து வரும் தொழிற்சாலைகளையும் சீரமைக்க முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதலமைச்சரான ஸ்டாலின் இப்பிரச்சனைகளில் கவனம் செலுத்தி மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். தமிழக மக்களின் நலனுக்காக விஜயகாந்த் நிறைய பேசி வந்தார்.

ஆனால், அவரை மக்கள் புரிந்து கொள்ளவில்லை. தமிழகத்தில் தேமுதிகவிற்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடுத்திருந்தால் தமிழகத்தில் மக்களாட்சியை விஜயகாந்த் கொடுத்திருப்பார். இப்போதும் காலம் உள்ளது. வருகின்ற 2026 சட்டசபை தேர்தலில் தேமுதிகவிற்கு மக்கள் ஒரு வாய்ப்பு கொடுங்கள். நிச்சயமாக இந்த அவலநிலை மாறி மக்களாட்சியை கொடுப்போம் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+