அங்க வரை வைரல்.. அமெரிக்க பத்திரிக்கைகளில் வந்த ஆளுநர் பற்றிய நக்கீரன் கட்டுரை!
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் குறித்த நக்கீரன் கட்டுரை அமெரிக்கா வரை வைரல் ஆகியுள்ளது.
Recommended Video

சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் குறித்த நக்கீரன் கட்டுரை அமெரிக்கா வரை வைரல் ஆகியுள்ளது.
இரண்டு நாள் முன் நக்கீரன் ஆசிரியர் ஆர். கோபால் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் அவரை சிறையில் எடுக்க கூடாது என்று எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்து அவரை விடுதலை செய்தது.
அவருக்கு எதிராக ஆளுநர் மாளிகை புகார் அளித்து இருந்தது. அவர் சட்ட பிரிவு 124ன் கீழ் கைது செய்யப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நக்கீரன் இதழில் ஆளுநர் குறித்து வந்த கட்டுரை காரணமாக அவர் கைது செய்யப்பட்டார்.
|
அந்த கட்டுரை
நக்கீரன் இதழில் வெளியான கட்டுரையொன்றுதான் நக்கீரன் கோபால் கைதுக்கு காரணம். ''4 முறை ஆளுநரை சந்தித்தேன் : நிர்மலா தேவி பரபரப்பு வாக்குமூலம்'' என்ற தலைப்பில் நக்கீரன் இதழில் வெளியான கட்டுரைதான் நக்கீரன் கோபால் மீதான நடவடிக்கைக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாகவே இவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

யாருக்குமே தெரியாது
இந்த கட்டுரை வந்தது பலருக்கு தெரியாது. இந்த பிரச்சனை பூதாகரமாக ஆகும் வரை இது பலருக்கு தெரியாமல் இருந்தது. நக்கீரன் கோபால் கைதை அடுத்து, தமிழகம் முழுக்க மட்டுமில்லாமல் இந்தியா முழுக்க இந்த கட்டுரை வைரல் ஆனது.

அமெரிக்க நாளிதழில் வந்தது
இந்த நிலையில் இந்த கைது குறித்தும், கட்டுரை குறித்தும் விரிவான கட்டுரை அமெரிக்க நாளிதழில் வந்துள்ளது. தி வாஷிங்டன் போஸ்ட் நாளிதழில் விரிவான கட்டுரை வெளியாகி உள்ளது. நக்கீரன் கோபால் பெயரும், அந்த கட்டுரை குறித்த விவரமும், கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டதும் சொல்லப்பட்டுள்ளது.

வைரல்
அதோடு வாஷிங்டன் போஸ்ட் கட்டுரையில் நக்கீரன் இதழில் வந்த கட்டுரை குறித்தும் முழுக்க முழுக்க விரிவான விளக்கம் உள்ளது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பெயரும் இதில் இடம்பிடித்துள்ளது. இந்தியாவிற்கு மட்டும் தெரிந்த கட்டுரை அமெரிக்கா வரை தற்போது வைரல் ஆகியுள்ளது.

கிழித்து தொங்கவிட்டனர்
அதோடு வாஷிங்டன் போஸ்ட் இதழ் நிறைய கேள்விகளையும் கேட்டுள்ளது. இந்தியாவில் பத்திரிக்கை சுதந்திரம் இதுதானா? இந்த விஷயத்திற்கு கூட கைது செய்வார்களா என்று கேள்வி கேட்டு கட்டுரை எழுதியுள்ளது. சாதாரணமாக போக வேண்டிய கட்டுரை.. அமெரிக்காவிற்கு பிளைட் ஏற்றிவிடப்பட்டுள்ளது!
-
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம்












Click it and Unblock the Notifications