For Quick Alerts
For Daily Alerts
Just In
முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் கிடுகிடு உயர்வு.. பொதுமக்களுக்கு முதற்கட்ட எச்சரிக்கை
Recommended Video
முல்லைப்பெரியாறு அணை 136 அடியை எட்டியது- வீடியோ
சென்னை: முல்லைப்பெரியாறு அணை 136 அடியை எட்டியதால் பொதுமக்களுக்கு முதற்கட்ட எச்சரிக்கைவிடுக்கப்பட்டது.
பொதுப்பணித்துறை சார்பில் இந்த எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பெய்து வரும் கன மழையால், முல்லைப்பெரியாறு அணை வேகமாக நிரம்பி வருகிறது.
மொத்தம் 152 அடி கொள்ளளவு கொண்ட முல்லை பெரியாறு அணையில், இன்றைய நீர் மட்டம் 136 அடியை எட்டியுள்ளது. எனவே, தேனி, இடுக்கி, முல்லைபெரியாறு நீரோட்ட பாதையில் உள்ளவர்களுக்கு முதல்கட்ட எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
அணை நீர் மட்டம், 138 அடியானதும் 2வது கட்ட எச்சரிக்கை விடுக்கப்படும். அணை நீர்மட்டம் 140 அடியானதும் 3ம் கட்ட எச்சரிக்கைவிடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments
English summary
The water level in Kerala's Mullaperiyar dam has reached 136 feet, The Idukki district is continuously under rain havoc, affecting normal life.
Story first published: Tuesday, August 14, 2018, 8:27 [IST]