"கராத்தே" ராஜேந்திரன் பண்ணையிலிருந்து 32 கோழிகளை ஆட்டையைப் போட்ட 3 பேர் கைது!
பாவூர்சத்திரம்: நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே சண்டைக் கோழிகள் உள்பட 32 கோழிகளைத் திருடியதாக 3 பேரை போலீ்ஸார் கைது செய்துள்ளனர்.
பாவூர்சத்திரம் அருகேயுள்ள வெள்ளைப்பனையேறிப்பட்டியைச் சேர்ந்தவர் அ.கராத்தே ராஜேந்திரன் (35). தோரணமலை அருகேயுள்ள கானாவூரில் உள்ள இவரது கோழிப் பண்ணையில் சண்டைக் கோழி உள்பட பல்வேறு தரப்பட்ட கோழிகளை வளர்த்து வருகிறார். சனிக்கிழமை இரவு இவரது கோழிப்பண்ணையில் 32 கோழிகள் திருட்டுப்போனது. இதுகுறித்து கராத்தே ராஜேந்திரன் பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

இதுகுறித்து பாவூர்சத்திரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜெயக்குமார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலையில் பாவூர்சத்திரம் பழைய சந்தையில் பலதரப்பட்ட கோழிகளை 4 பேர் விற்பனைக்கு கொண்டு வந்திருப்பது குறித்து பாவூர்சத்திரம் போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அங்கு போலீஸார் விரைந்து சென்றனர்.
போலீஸாரைப் பார்த்ததும் ஓட முற்பட்ட 4 பேரில் 3 பேரைப் போலீஸார் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கோழிப்பண்ணை அமைந்துள்ள கானாவூரைச் சேர்ந்த செ.அந்தோணி (25), கா.குத்தாலிங்கம் (30), பொ.மாரியப்பன் (31) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களைக் கைது செய்த போலீஸார் அவர்களிடமிருந்து ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள 32 கோழிகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய கா.செந்தில்குமார் என்பவரைத் தேடி வருகின்றனர்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications