சென்னை போலீஸ்க்கு லீவு கிடையாது.. 24 மணி நேரமும் பணியில் இருக்க அறிவுறுத்தல்!
சென்னை போலீஸ் விடுமுறை எடுக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை: போலீஸ் விடுமுறை எடுக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக் குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனால் காவேரி மருத்துவமனையில் இரவு முதலே போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தீவிர பாதுகாப்பு
இதேபோல் கோபாலபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.
போலீசாருக்கு லீவு இல்லை
இந்நிலையில் சென்னையில் சட்டம் ஒழுங்கு, மத்திய குற்றப்பிரிவு, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை உள்ளிட்ட காவல்துறை பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் விடுப்பு எடுக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பணிக்கு திரும்ப உத்தரவு
ஏற்கனவே விடுப்பில் சென்று இருக்கும் காவலர்களும் விடுப்பை ரத்து செய்துவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பணியில் இருக்க உத்தரவு
போலீசார் 24 மணிநேரமும் பணியில் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.