களத்தில் குதித்த தெற்குவீரபாண்டிபுர மக்கள்.. தூத்துக்குடியில் பெரிதாகும் ஸ்டெர்லைட் போராட்டம்
ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு தூத்துக்குடி தெற்குவீரபாண்டிபுரம் மக்களும் ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள்.
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு தூத்துக்குடி தெற்குவீரபாண்டிபுரம் மக்களும் ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 51 ஆம் நாளாக போராடி வருகிறார்கள். ஸ்டெர்லைட் ஆலையை மூடும் வரை போராட்டம் தொடரும் என்று உறுதியாக களம் கண்டு இருக்கிறார்கள்.

இந்த நிலையில் ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு தூத்துக்குடி தெற்குவீரபாண்டிபுரம் மக்களும் ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள். இன்று மாலை ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் குதித்து இருக்கிறார்கள்.
ஸ்டெர்லைட்டுக்கு எதிரான குமரெட்டியாபுர மக்களின் நீண்ட போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாக தெற்குவீரபாண்டிபுரம் மக்கல் பேட்டி அளித்துள்ளார்கள்.
இதனால் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டம் பெரிதாகி இருக்கிறது. அருகாமையில் இருக்கும் கிராம மக்களும் போராட்டத்தில் ஈடுபட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications