கொள்ளையடித்த வீட்டின் முன் நகையை வீசிய திருடனால் பரபரப்பு
நெல்லை: களக்காடு அருகே கொள்ளையடித்த நகைகளை அந்த வீட்டின் முன்பே வீசிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி மகிழடியை சேர்ந்தவர் விவசாயி ராஜதுரை. அவர் வீட்டில் உள்ள பீரோவில் 20 பவுன் நகை வைத்திருந்தார். இந்த நிலையில் நேற்று மாலை வேளையில் பீரோவை திறந்து பார்த்தபோது ஆறரை பவுன் நகை மாயமாகி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்தார்.

போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை நடத்தினர். மேலும் அக்கம், பக்கம் வசிப்பவர்களின் கை ரேகைகள் பதிவு செய்யப்பட்டன. இந்த நிலையில்
மாயமான நகைகளில் 4 பவுன் நகை இரவு ராஜதுரை வீட்டு முன்பு வீசப்பட்டு கிடந்தன. இது குறித்து அவர் திருக்குறுங்குடி போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் அங்கு சென்று நகையை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
போலீஸ் விசாரணை தீவிரம் அடைந்ததால் நகையை திருடிய மர்ம நபர்களே நகைகளை வந்து ராஜதுரை வீட்டில் வீசி சென்றிருக்கலாம் என்று தெரிகிறது. இதில் ஈடுபட்ட
மர்ம நபர்கள் யார், மீதமுள்ள இரண்டரை பவுன் நகைகள் எங்கே என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications