பாஜக கூட்டணியில் மதிமுக இணையக் கூடாது.. திருமாவளவன் கோரிக்கை
சென்னை: மதவாத பாஜக கூட்டணியில் மதிமுக இணையக் கூடாது. அது வகுப்புவாத சக்திளை ஊக்குவிக்கும் செயலாக அமைந்து விடும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், வகுப்பு வாத சக்திகளை ஊக்குவிக்கும் கட்சி பாஜக. அக்கட்சி தலைமையிலான கூட்டணியில் மதிமுக இணையக் கூடாது என்பது எனது வேண்டுகோள்.

ஈழத்தமிழர் விவகாரத்தில் காங்கிரஸ், பாஜகவின் நிலைப்பாடு ஒன்றாகவே உள்ளது. வேறுபாடே இல்லை.
தமிழக, இலங்கை மீனவர்கள் பேசினால் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காது. அதனால் எந்த லாபமும் கிடைக்காது. மீனவர்கள் பிரச்சனைக்கு இந்தியா இலங்கை அரசுகள்தான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
சிங்கள ராணுவம் நடத்திய போர்க்குற்றம் தொடர்பாக ஐ.நா. சபை கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா கொண்டுவர வேண்டும் என்றார் திருமாவளவன்












Click it and Unblock the Notifications