அய்யாகண்ணு பற்றி எச். ராஜா அவதுறு பேச்சு.. இது அரசியல் நாகரிகமா.. திருமாவளவன் கேள்வி
அய்யாகண்ணு பற்றி பாஜக தலைவர் எச். ராஜா பேசியது நாகரிகமானதா என்று விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: தமிழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி அதன் மூலம் காலூன்ற நினைக்கிறது பாஜக என்று திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.
தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் பாஜகவை கடுமையாக சாடினார். தமிழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி வேரூன்ற பார்க்கிறது பாஜக என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணுவை அண்மையில் பாஜக தலைவர் ஹெச்.ராஜா அவதூறாக பேசியிருந்தார். எச். ராஜாவின் இந்த பேச்சும், அவதூறும் அரசியல் நாகரிகமானது அல்ல என்றும் திருமாவளவன் கூறினார்.
அதிமுகவில் ஏற்பட்டுள்ள குழப்பங்களை மேலும் அதிகரித்து அதன் மூலம் தமிழகத்தில் காலூன்றும் பாஜகவின் கனவு பலிக்காது என்றும் திருமாவளவன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications