ஆர்கேநகர் இடைத்தேர்தல்: திருமா- முத்தரசன் தீவிர ஆலோசனை
ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
சென்னை: ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதனால் மக்கள் நலக்கூட்டணி சார்பில் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்கே.நகருக்கு வரும் ஏப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பணிகளில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாளவன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் முத்தரசன் ஆகியோர், சென்னை தியாகராயநகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.
இதனால் ஆர்.கே நகர் இடைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி போட்டியிடப் போகிறதா அல்லது மற்ற கட்சிகளுக்கு ஆதரவு தெரிவிக்கப் போகிறதா என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது..