துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கோரி ஹைகோர்ட்டில் திருமாவளவன் மனு
Subscribe to Oneindia Tamil
சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தமக்கு துப்பாக்கி ஏந்திய 2 போலீசார் பாதுகாப்பு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் திருமாவளவன் தாக்கல் செய்துள்ள மனுவில், எனக்கு அடிக்கடி கொலை மிரட்டல்கள் வருகின்றன. என்னைத் தாக்கவும் முயற்சிகள் நடைபெற்றன.
உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். துப்பாக்கி ஏந்திய 2 போலீசார் பாதுகாப்பு தர உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளார்.












Click it and Unblock the Notifications