திருமுருகன் காந்தி உள்ளிட்ட 17 பேருக்கு சிறைக் காவல் நீட்டிப்பு
மே 17 ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோரின் நீதிமன்றக் காவல் ஜூன் 14-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை: மே 17 ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ள நிலையில் அவரது நீதிமன்றக் காவல் ஜூன் 14-ஆம் தேதி வரை நீட்டிப்பதாக சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கையில் தனிஈழம் கோரி போராடி வந்த தமிழர்களை மீது இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் ராணுவம் கடந்த 2009-ஆம் ஆண்டு இறுதிக்கட்ட போர் நடத்தி கொத்து கொத்தாக கொன்று குவித்தது.

தமிழர்கள் அதிகளவில் தஞ்சமடைந்த முள்ளிவாய்க்கால் பகுதியில் இலங்கை ராணுவம் கொலை வெறி இனவெறித் தாக்குதல்களை நடத்தினர். மே 17-ஆம் தேதி நடந்த இந்த சம்பதவத்தை தொடர்ந்து ஆண்டுதோறும் மே 17 இயக்கத்தினர் சென்னை மெரீனாவில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தி வந்தனர்.
இந்நிலையில் இந்த ஆண்டு அந் நிகழ்ச்சி நடத்த தடை விதிக்கப்பட்டதால், கடந்த 21-ஆம் தேதி மே 17 இயக்கத்தினர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செய்தனர். அப்போது அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் இருந்தனர்.
இதைத் தொடர்ந்து அவர்கள் மீது குண்டர் சட்டமும் பாய்ந்த நிலையில் இந்திய ஆயில் நிறுவனத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக திருமுருகன்காந்தி மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட திருமுருகன் காந்தி உள்ளிட்டோரின் காவலை வரும் ஜூன் 14-ஆம் தேதி வரை நீட்டிப்பதாக உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications