வயிற்றில் புண் .. திருமுருகன் காந்திக்கு 3-வது நாளாக தீவிர சிகிச்சை
திருமுருகன் காந்திக்கு 3-வது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வேலூர்: உடல்நலம் பாதிக்கப்பட்ட மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்திக்கு இன்று 3-வது நாளாக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து ஐ.நா. சபையில் பேசினார் என்பதற்காக நாடு திரும்பியதும் விமான நிலையத்திலேயே வைத்து கைது செய்யப்பட்டார்.
[ அசிங்கம்.. அவமானம்.. கோட் சூட் போட்ட ஒரு அதிகாரி செய்யற வேலையா இது? ]
உடல்நிலை பாதிப்பு
பிறகு கடந்த ஆகஸ்ட் 11-ந் தேதி முதல் திருமுருகன் காந்தி வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். 50 நாட்களுக்கு மேல்சிறையில் உள்ள திருமுருகன் காந்திக்கு நேற்றி காலை வயிற்றுப்போக்கு, மயக்கம், மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
உணவு குழாயில் பிரச்சனை
உடனடியாக பரிசோதிக்கப்பட்டதில் அவருடைய உணவு குழாயில் பிரச்சனை இருப்பது தெரியவந்தது. அதனால் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு திருமுருகன் காந்தியை ஐ.எம்.சி.யு. பிரிவில் அனுமதித்து டாக்டர்கள் தீவிரமாக சிகிச்சை அளித்தனர்.
2-வது நாளாக சிகிச்சை
இன்று 2-வது நாளாகவும் திருமுருகன் காந்திக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஸ்கேன் எடுத்து பார்த்ததில் வயிற்றில் புண் இருப்பதும் தெரியவந்துள்ளது. இதனால் மருத்துவ குழு ஒன்று திருமுருகன் காந்தி உடல்நிலையை பரிசோதித்து கொண்டே வருகிறது.
தலைவர்கள் குற்றச்சாட்டு
இந்நிலையில், சிறையில் பாம்புகள், புழுப் பூச்சிகள் நிறைந்த பாழடைந்த தனியறையில் திருமுருகன் காந்தி அடைக்கப்பட்டுள்ளதாகவும், சுகாதாரமான உணவு வழங்கப்படாததால்தான் உடல்நிலை மோசமாகி விட்டதாக மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட தலைவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
உடல்நிலை பாதிப்பு
பிறகு கடந்த ஆகஸ்ட் 11-ந் தேதி முதல் திருமுருகன் காந்தி வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். 50 நாட்களுக்கு மேல்சிறையில் உள்ள திருமுருகன் காந்திக்கு நேற்று முன்தினம் காலை வயிற்றுப்போக்கு, மயக்கம், மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
3-வது நாளாக சிகிச்சை
இன்று 3-வது நாளாகவும் திருமுருகன் காந்திக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஸ்கேன் எடுத்து பார்த்ததில் வயிற்றில் புண் இருப்பதும் தெரியவந்துள்ளது. இதனால் மருத்துவ குழு ஒன்று திருமுருகன் காந்தி உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து கொண்டே வருகிறது.