சனிப் பெயர்ச்சி மார்ச் 29-ந் தேதி நிகழாது- திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் நிர்வாகம் அறிவிப்பு
காரைக்கால்: சனிப்பெயர்ச்சி வரும் 29-ந் தேதி நிகழும் என்கிற தகவல்கள் வெளியாகி இருந்தன; ஆனால் மார்ச் 29-ந் தேதி சனிப்பெயர்ச்சி நிகழாது என புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் அருகே உள்ள திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் நிர்வாகம் இன்று விளக்கம் அளித்துள்ளது. மேலும் பாரம்பரிய கணிப்பு முறைப்படி 2026-ம் ஆண்டுதான் சனிப்பெயர்ச்சி நிகழும் என்றும் திருநள்ளாறு கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், பாரம்பரிய கணிப்பு முறைப்படி நடப்பு 2025-ம் ஆண்டு மார்ச் 29-ந் தேதி சனிப்பெயர்ச்சி நிகழாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். அதேநேரத்தில் வரும் 29-ந் தேதி திருநள்ளாறு கோவிலில் வழக்கமான பூஜைகள் மட்டுமே நடைபெறும். சனிப்பெயர்ச்சியானது 2026-ம் ஆண்டுதான் நிகழும். இது தொடர்பான தேதி பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

ஆன்மீக அன்பர்கள், சனிப்பெயர்ச்சி, குருபெயர்ச்சி உள்ளிட்டவைகளை மிகவும் எதிர்பார்த்திருப்பர். இத்தகைய நிகழ்வின் மூலம் தங்களது வாழ்வில் முன்னேற்றம், மாற்றங்கள் நிகழுமா என்கிற எதிர்பார்ப்பு நிலவும்.
இந்த ஆண்டு சனிப்பெயர்ச்சி வரும் 29-ந் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில் எந்தெந்த ராசி, நட்சத்திரங்களுக்கு எப்படியான பலன்கள் கிடைக்கும் என்பதை ஜோதிடர்கள் விலாவாரியாக விவரித்தும் வருகின்றனர்.
இன்னொரு பக்கம், நடப்பாண்டு மார்ச் 29-ந் தேதி சனிப்பெயர்ச்சி இருக்குமா? இல்லையா? எனிற குழப்பமும் இருந்து வந்தது. இந்த நிலையில் சனீஸ்வர பகவானுக்கான பிரத்யேகமான கோவில் உள்ள திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் நிர்வாகம் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
திருநள்ளாறு கோவில் நிர்வாகம் வெளியிட்ட இந்த அறிக்கையில், சனீஸ்வர பகவான் கோவிலில் வாக்கிய பஞ்சாங்க முறைப்படிதான் பின்பற்றப்படுகிறது. இந்த மரபுப்படி தற்போதைய மார்ச் 29-ந் தேதி சனிப்பெயர்ச்சி நிகழாது; அடுத்த ஆண்டுதான் சனிப்பெயர்ச்சி நிகழும். அடுத்த ஆண்டு சனிப்பெயர்ச்சி எப்போது நிகழும் என்பது பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்; அதேநேரத்தில் வரும் 29-ந் தேதி திருநள்ளாறு கோவிலில் வழக்கமான பூஜைகள் நடைபெறும் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே திருநள்ளாறு சனிஸ்வர பகவான் திருத்தலத்துக்கு வருகை தரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. கோடை விடுமுறை காலம் என்பதால் பெரும் எண்ணிக்கையில் பக்தர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். இதனால் பக்தர்கள் எளிதாக, கூட்ட நெரிசல் இல்லாமல் சுவாமி தரிசனம் செய்வதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதேபோல நள தீர்த்தத்தில் பக்தர்கள் பாதுகாப்பாக புனித நீராடவும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications