இன்று மிகவும் மகிழ்ச்சியான நாள்.. மோடிக்கு ஏற்ற தலைவர் ராகுல்தான்.. திருநாவுக்கரசர் மகிழ்ச்சி!
காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
சென்னை: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
அகில இந்தியா காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் 87வது தலைவர் ஆவர்.
ராகுல்காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு அக்கட்சியினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், இன்று மிகவும் மகிழ்ச்சியான நாள் என தெரிவித்துள்ளார்.
மேலும் மோடியை வீழ்த்த ராகுல் காந்திதான் சரியான தலைவர் என்றும் திருநாவுக்கரசர் தெரிவித்தார். மோடியை வீழ்த்தக்கூடிய சக்தி ராகுல் காந்தியிடம் தான் உள்ளது என்றும் அவர் கூறினார். ராகுல்காந்திக்கு தமிழக காங்கிரஸ் சார்பில் வாழ்த்து கூறிய அவர், ராகுல் காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டதால் தொண்டர்களும் மக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளதாகவும் கூறினார்.