நீங்க எங்க செல்லப் பிள்ளைய்யா, உங்கள தெரியாமலா இருக்கும்: திருநாவுக்கரசரை நெகிழ வைத்த முதியவர்

வரும் நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் திருநாவுக்கரசர் போட்டியிடுகிறார். இந்த தொகுதியுடன் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி சட்டசபை தொகுதி சேர்க்கப்பட்டுள்ளது. அறந்தாங்கியில் திருநாவுக்கரசர் நன்கு அறிமுகம் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அவர் அறந்தாங்கியில் உள்ள வீரமாகாளியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு தேர்தல் பிரச்சாரத்தை நேற்று துவங்கினார். அப்போது அவர் கோவில் வாசலில் அர்ச்சனை பொருட்கள் விற்கும் முதியவரை பார்த்ததும் அவர் அருகில் சென்று அண்ணே என்னை தெரிகிறதா, நான் தான் அண்ணே திருநாவுக்கரசர் என்று அவர் கூறத் துவங்கினார்.
அப்போது அந்த முதியவரோ, நீங்க எங்க செல்ல பிள்ளைய்யா உங்களை தெரியாமலா இருப்போம் என்றார். இதை கேட்ட திருநாவுக்கரசர் மகிழ்ச்சி அடைந்தார். உடனே அவருடன் வந்திருந்தவர்கள் அண்ணே உங்களை யாரும் மறக்க மாட்டார்கள் அண்ணே என்று தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications