காமராஜர் அரங்கத்தில் காமராஜர் படமே இல்லாமல் கருத்தரங்கு நடத்துவதா? காங்கிரஸில் புகைச்சல்
காமராஜர் அரங்கத்தில் காமராஜர் படமே இல்லாமல் கருத்தரங்கை நடத்தியதால் காங்கிரஸில் புகைச்சல் கிளம்பியுள்ளது.
சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் காமராஜர் படம் கூட வைக்காமல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் இன்று பணமதிப்பிழப்பு கருத்தரங்கு நடத்தப்பட்டதற்கு அக்கட்சியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்ட பின்னர் தமது பதவியை தக்க வைக்க தொடர்ந்து போராடி வருகிறார். இதன் ஒருபகுதியாக பணமதிப்பிழப்பு தொடர்பாக இன்று கருத்தரங்கத்தை திருநாவுக்கரசர் ஏற்பாடு செய்தார்.

பணமதிப்புநீக்கம்- மக்கள் படும் வேதனை என்ற தலைப்பில் இந்த கருத்தரங்கு நடத்தப்பட்டது. இக்கருத்தரங்குக்கான பேனரில் ராகுல் காந்தி படம் மட்டுமே பெரிதாக அச்சிடப்பட்டிருந்தது. காமராஜர் அரங்கத்தில் நடத்தும் நாம் காமராஜர் படத்தை கூட பேனரில் வைக்காமல் இருப்பது சரியல்ல என திருநாவுக்கரசரிடம் சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் கருத்தரங்கை நடத்தி முடிக்க வேண்டும் என்பதில் மும்முரமாக இருந்தாராம் திருநாவுக்கரசர். திராவிட பாரம்பரியத்தில் இருந்து வந்தவர் என்பதாலேயே காமராஜரை ஒதுக்கி வைக்க முயற்சிக்கிறாரே என காங்கிரஸ் தொண்டர்கள் புலம்பல்தான் காமராஜர் அரங்கத்தில் கேட்க முடிந்தது.












Click it and Unblock the Notifications