Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

11 மணி நேர திருப்பத்தூர் திக் திக்.. கார் உள்ளே 5 பேர்! கதவை திறந்தால் இரைதான்! சிக்கிய சிறுத்தை

Subscribe to Oneindia Tamil

திருப்பத்தூர்: திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தை ஒட்டிய தனியார் பள்ளி வளாகம் அருகே பதுங்கியிருந்த சிறுத்தை 11 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிக்கியது.

திருப்பத்தூர் நகராட்சிக்குள்பட்ட சாமநகர் பகுதியில் உள்ள வீட்டில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் வனத்துறையினர் சிறுத்தையை தேடி வந்தனர்.

cheetah thirupathur

இதையடுத்து அந்த வீட்டிலிருந்த சிறுத்தை அருகே உள்ள தனியார் பள்ளி வளாகத்திற்கு சென்றுவிட்டது. அங்கிருந்த பள்ளி காவலாளி கோபால் என்பவரை தலையில் தாக்கியது. இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதையடுத்து மேல் சிகிச்சைக்காக அவர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதனிடையே பள்ளியில் இருந்த சிறுத்தை அருகே உள்ள கார் பார்க்கிங் ஏரியாவிற்கு சென்றது.

பக்கத்திலேயே பதுங்கிய சிறுத்தை.. காரில் 6 மணிநேரம் தவித்த 5 பேர்.. திக்திக் திருப்பத்தூர்


இதையடுத்து திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. சிறுத்தையை பிடிப்பதற்காக ஓசூர், சேலத்தில் இருந்து 20 வனத்துறையினர் திருப்பத்தூருக்கு வந்தனர். கார் பார்க்கிங்கில் சிறுத்தை நுழைந்த போது அங்கிருந்த சில இளைஞர்கள் சிறுத்தையிடம் இருந்து தப்ப காரில் ஏறி அமர்ந்து கொண்டனர்.

அவர்கள் நீண்ட நேரமாக காருக்குள் சிக்கிக் கொண்டனர். பின்னர் அவர்கள் தங்கள் உறவினர்களுக்கு போன் செய்து விஷயத்தை சொல்லி சிறுத்தைகள் தங்கள் காருக்கு அருகிலேயே இருப்பதாக கூறியுள்ளனர். இதையடுத்து அவர்கள் போலீஸில் புகார் அளித்த நிலையில் திருப்பத்தூர் கலெக்டர் தர்ப்பகராஜ், மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான், மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் மற்றும் வனத்துறையினர் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்தனர்.

காரில் இருந்தவர்களிடம் வீடியோ காலில் பேசிய வனத்துறையினர் சிறுத்தை எங்கே இருக்கிறது என்பதை கேட்டுத் தெரிந்து கொண்டதுடன் எதற்கும் அஞ்ச வேண்டாம் என்றும் எக்காரணத்தை கொண்டும் காரில் இருந்து இறங்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தினர். இதையடுத்து கார் பார்க்கிங்கில் சிறுத்தை இருந்ததை உறுதி செய்த நிலையில் அதை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முயற்சித்தனர்.

அப்போது அங்கிருந்து தப்பி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. இதையடுத்து 11 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீண்டும் சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தி அதை உயிருடன் பிடித்து கூண்டில் அடைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறுத்தையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வனத்துறையினர் முயற்சித்து வருகிறார்கள்.

காரில் இருந்து ஆரோக்கியசாமி, தினகரன், இம்ரான், அஸ்கர் கான், வெங்கடேசன் ஆகியோர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். ஆங்காங்கே சிறுத்தை காட்டை விட்டு குடியிருப்பு பகுதிக்குள் வருவது வாடிக்கையாகிவிட்டது. இதனால் அடர்ந்த வனத்திற்கு அருகே உள்ள மக்கள் அச்சத்துடன் நாளை கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் வீட்டின் தடுப்புச் சுவரில் ஏறி வந்த சிறுத்தை அங்கிருந்த வளர்ப்பு நாயை கவ்வி சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அது போல் மயிலாடுதுறை மாவட்டம் செம்மங்குளத்தில் கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி சிறுத்தை புகுந்து நாய்களை வேட்டையாடிய சிசிடிவி காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகின. இது போல் ஆங்காங்கே சிறுத்தை, யானை போன்ற வனவிலங்குகள் ஊருக்குள் நுழைந்து மக்களை அச்சத்தில் ஆழ்த்தும் சம்பவம் அடிக்கடி நடைபெறுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+