வெளுக்கும் மழை.. எங்கே எவ்வளவு பெய்திருக்கு தெரியுமா?
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகளவாக சாத்தனூரில் 23 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
Recommended Video

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகளவாக சாத்தனூரில் 23 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
ஓகி புயலால் தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி அருகே மையம்கொண்டிருந்த அந்த புயல் தென் மாவட்டங்கள் உட்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழையை கொடுத்து வருகிறது.

ஓகி புயல் லட்சத்தீவை நோக்கி சென்ற நிலையிலும் தமிழகம் மற்றும் கேரளாவில் அதன் தாக்கல் குறையவில்லை. மேலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் அந்தமான் அருகே உருவாகியுள்ள புதிய காற்றழுத்தம் ஆகியவற்றால் தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகளவாக திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணை பகுதியில் 23 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. சீர்காழியில் 19 சென்டி மீட்டரும் அணைக்காரன்சத்திரத்தில் தலா 18 சென்டி மீட்டரும் சிதம்பரத்தில் 17 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
விருத்தாசலம், செங்கம் ஆகிய பகுதிகளில் தலா 15 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 17 இடங்களில் மிக கனமழை பெய்துள்ளது. தற்போது வரை சராசரி அளவை விட வடகிழக்கு பருவ மழை 5% அதிகம் பெய்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications