Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெளுக்கும் மழை.. எங்கே எவ்வளவு பெய்திருக்கு தெரியுமா?

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகளவாக சாத்தனூரில் 23 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    அந்தமான் அருகே உருவாகியுள்ள காற்றழுத்தம் புயலாக மாற வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்

    சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகளவாக சாத்தனூரில் 23 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    ஓகி புயலால் தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி அருகே மையம்கொண்டிருந்த அந்த புயல் தென் மாவட்டங்கள் உட்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழையை கொடுத்து வருகிறது.

    Thiruvannamalai district Sathanur dam got 23 cm of highest rain in Tamilnadu

    ஓகி புயல் லட்சத்தீவை நோக்கி சென்ற நிலையிலும் தமிழகம் மற்றும் கேரளாவில் அதன் தாக்கல் குறையவில்லை. மேலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் அந்தமான் அருகே உருவாகியுள்ள புதிய காற்றழுத்தம் ஆகியவற்றால் தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகளவாக திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணை பகுதியில் 23 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. சீர்காழியில் 19 சென்டி மீட்டரும் அணைக்காரன்சத்திரத்தில் தலா 18 சென்டி மீட்டரும் சிதம்பரத்தில் 17 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

    விருத்தாசலம், செங்கம் ஆகிய பகுதிகளில் தலா 15 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 17 இடங்களில் மிக கனமழை பெய்துள்ளது. தற்போது வரை சராசரி அளவை விட வடகிழக்கு பருவ மழை 5% அதிகம் பெய்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+