பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து திருவண்ணாமலையில் மாணவ மாணவிகள் போராட்டம்!
பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து திருவண்ணாமலையில் அரசு கலைக்ககல்லூரி மாணவ மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Recommended Video
திருவண்ணாமலை: பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து திருவண்ணாமலையில் அரசு கலைக்ககல்லூரி மாணவ மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசு அண்மையில் அரசுப் பேருந்துகளின் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியது. கச்சா எண்ணெய் விலை உயர்வு, பேருந்து உதிரிபாகங்களின் விலை உயர்வு மற்றும் ஊழியர்கள் சம்பள உயர்வு உள்ளிட்ட காரணங்களால் டிக்கெட் விலை உயர்த்தப்பட்டதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் கட்டண உயர்வுக்கு அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். கட்டண உயர்வை திரும்பக்கோரி மாணவர்கள் தொடர் போராட்டங்களின் ஈடுபட்ட வருகின்றனர்.
இந்நிலையில் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வாயில் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.