ராகுல் சொல்லிட்டு போய் நாலு நாள் கூட ஆகலையே... அதுக்குள்ள நாறிப்போச்சே
ஒற்றுமையாக இருங்கள் என்று சத்தியமூர்த்தி பவனுக்கு வந்து ராகுல்காந்தி பேசிவிட்டு போய் ஒரு வாரம் கூட ஆகவில்லை அதற்குள் மகளிர் காங்கிரஸ் அடிதடியில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை: ஆபாச பேச்சு, குடுமிப்பிடி சண்டை என ரத்தக்களறியாக மாறியுள்ளது சத்தியமூர்த்தி பவன். ராகுல்காந்தி வந்து விட்டு சென்ற சில தினங்களில் இப்படி நடந்துள்ளதுதான் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராகுல்காந்தி கடந்த 2011ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்யமூர்த்தி பவனுக்கு வருகை தந்தார். அதன் பிறகு அவர் பலமுறை தமிழகத்துக்கு வந்தபோதும் சத்திய மூர்த்தி பவனுக்கு வந்தது இல்லை.
6 ஆண்டுகளுக்கு பின் அவர் சத்தியமூர்த்தி பவன் வந்ததால் காங்கிரசார் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தொண்டர்கள், நிர்வாகிகள் மத்தியில் பேசிய அவர், அனைவரும் ஒற்றுமையாக இருங்கள், கோஷ்டி பூசலை மறந்து மக்களை சென்று சந்தியுங்கள் என்றார்.
தமிழகத்தில் நமக்கு இப்போது சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. காமராஜர் ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வரவேண்டும் என்றால் ஒற்றுமையாக செயல்பட்டால் மட்டுமே முடியும் என்றும் கூறினார்.
சத்தியமூர்த்தி பவனில் இன்றைய சண்டை அனைவரையுமே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. ராகுல்காந்தி சொல்லிட்டு போய் 4 நாள் கூட ஆகலையே அதுக்குள்ள மகளிர் காங்கிரஸ் கட்சியினர் இப்படி நாறிட்டாங்களே என்று பேசிக்கொள்கின்றனர்.