என்ன ஒரு வீடியோ: ரூம் போட்டு யோசிப்பாங்களோ?
சென்னை: சம்பள நாள் அன்று நாம் எப்படி இருப்போம், மறுநாள் முதல் எப்படி இருப்போம் என்பதற்கு ஃபேஸ்புக்கில் அருமையான மீம்ஸ் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
எவ்வளவு தான் சம்பாதித்தாலும் பத்த மாட்டேங்குதே என்பது தான் பலரின் புலம்பலாக உள்ளது. சம்பளம் வந்த அன்றே அது போகும் இடம் தெரியாமல் போய்விடுகிறது. வீட்டு வாடகை, மளிகை, மின் கட்டணம், பால் கட்டணம், இன்டர்நெட் கட்டணம், செல்போன் கட்டணம் என கொத்தாக வரும் சம்பளம் கொஞ்சம், கொஞ்சமாக போய்விடுகிறது.
உங்களின் இந்த மாத சம்பளம் ரூ.... உங்கள் வங்கிக் கணக்கில் செலுத்தியாகிவிட்டது என்று நமக்கு வரும் எஸ்.எம்.எஸ்.ஸை பார்த்து மகிழ்ச்சி அடைகிறோம். ஆனால் அந்த மகிழ்ச்சி சில நிமிடங்கள் கூட நிற்பது இல்லை.
அதிலும் வீட்டுக் கடன், வாகன கடன், கல்விக் கடன் இருந்தால் உங்கள் சம்பளம் வந்த இடம் என்ன தடமே தெரியாமல் போய்விடும். இப்படி சம்பளம் வந்த வேகத்தில் செலவாகிவிடுவது குறித்து ஃபேஸ்புக்கில் ஒரு மீம்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது.
வீடியோவை பார்ப்பவர்கள் ஆமாம்பா என் நிலைமையும் இப்படி தான் உள்ளது என்று சொல்லும் அளவு சூப்பராக உள்ளது.












Click it and Unblock the Notifications