For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தொடரும் துப்பாக்கிச்சூடு.. தூத்துக்குடி ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அதிரடி மாற்றம்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கடேசன் மற்றும் காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    இன்டர்நெட் சேவை முடக்கம் | தூத்துக்குடி ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் மாற்றம்- வீடியோ

    தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ்மற்றும் காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் மற்றும் காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதைத்தொடர்ந்து போலீசார் கடந்த 2 நாட்களாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

    மருத்துவமனையில் சிகிச்சை

    மருத்துவமனையில் சிகிச்சை

    இதில் இதுவரை 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் படுகாயமடைந்த 70க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    ஆட்சியர் எஸ்பி மாற்றம்

    ஆட்சியர் எஸ்பி மாற்றம்

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு காரணமான மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன் ஆகியோரை அதிரடியாக இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    சந்தீப் நந்தூரி நியமனம்

    சந்தீப் நந்தூரி நியமனம்

    தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் சர்வ சிக்ஷா அபியான் மாநில திட்டத்தின் கூடுதல் இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டு தூத்துக்குடி ஆட்சியராக நெல்லை ஆட்சியர் சந்தீப் நந்தூரி நியமிக்கப்பட்டுள்ளார். நெல்லை ஆட்சியராக ஷில்பா பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    முரளி ரம்பா நியமனம்

    முரளி ரம்பா நியமனம்

    இதேபோல் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன் வட சென்னை போக்குவரத்து காவல் ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி எஸ்பியாக முரளிரம்பா நியமிக்கப்பட்டுள்ளார்.

    சரியாக கையாளவில்லை

    சரியாக கையாளவில்லை

    நீலகிரி எஸ்பியாக சென்னை வடக்கு போக்குவரத்து காவல் ஆணையர் சண்முகப் பிரியா நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்டெர்லைட் விவகாரத்தை சரியாக கையாளததால் தூத்துக்குடி ஆட்சியர் மற்றும் எஸ்பி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

    தமிழக அரசு அதிரடி உத்தரவு

    தமிழக அரசு அதிரடி உத்தரவு

    முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தலைமை செயலாளர் மற்றும் டிஜிபியுடன் ஆலோசனை நடத்திய நிலையில் இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Thoothukudi Collector and SP has been transferred. Sandeep Nandhuri has been appointed as Thoothukudi collector.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X