போராட்டத்தின் வேகத்தை குறைக்கவே ஸ்டெர்லைட் ஆலையை மூடியுள்ளனர்: கிராம மக்கள் குற்றச்சாட்டு
போராட்டத்தின் வேகத்தை குறைக்கவே ஸ்டெர்லைட் ஆலையை மூடியுள்ளனர் என கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
Recommended Video

தூத்துக்குடி: போராட்டத்தின் வேகத்தை குறைக்கவே ஸ்டெர்லைட் ஆலையை மூடியுள்ளனர் என கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப்பணிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் குமரெட்டியாபுரம் கிராம மக்கள் 47 வது நாளாக இன்றும் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
தொடர் விடுமுறை என்பதால் நேற்றும் இன்றும் போராட்டத்தில் அதிகளவு பள்ளி குழந்தைகள் பங்கேற்றுள்ளனர். போராட்டத்திற்கு அரசியல் கட்சியினர் பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

மாணவர்கள் ஆதரவு
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம மக்கள் அங்கேயே சமைத்து சாப்பிட்டு உறங்கி வருகின்றனர். கிராம மக்களுக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

தீவிரமடையும் போராட்டம்
அரசியல் கட்சிகளும் கையெழுத்து இயக்கங்களை நடத்துவதோடு முற்றுகைப் போராட்டத்தையும் அறிவித்துள்ளன. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

பராமரிப்பு பணி - மூடல்
இந்நிலையில் பராமரிப்பு பணி காரணமாக ஸ்டெர்லைட் ஆலையை 15 நாட்கள் மூடப்படுவதாக ஆலை நிர்வாகம் நேற்று அறிவித்தது. வரும் ஏப்ரல் 10ஆம் தேதிதான் ஆலை மீண்டும் திறக்கப்படும் என்றும் ஸ்டெர்லைட் ஆலை தெரிவித்துள்ளது.

போராட்டம் தொடரும்
தீவிரமடைந்துள்ள போராட்டத்தின் வேகத்தை குறைக்கவே ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டிருப்பதாக கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஆலை நிரந்தரமாக மூடப்படும் வரை போராட்டம் தொடரும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
-
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
பிரபல துணை நடிகை தீபாவின் தந்தைக்கு அரிவாள் வெட்டு.. டீக்கடையில் பயங்கரம்! என்ன நடந்தது? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications