தமிழக அமைச்சரவையில் தோப்பு வெங்கடாச்சலம், பழனியப்பனுக்கு இடமில்லை !
சென்னை: தமிழகத்தில் புதிதாக அமையவிருக்கும் அமைச்சரவையில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம், உயர் கல்வி துறை அமைச்சர் பழனியப்பன் ஆகியோருக்கு தற்போதைய அமைச்சரவையில் இடம் அளிக்கப்படவில்லை.
தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கிறது. தேர்தலின் போது, கடந்த ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த 15 பேர்களுக்கு மீண்டும் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

இதில் நத்தம் விசுவநாதன் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் போட்டியிட்டு திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமியிடம் தோல்வியைத் தழுவினார். ஆர்.வைத்தியலிங்கம் ஒரத்தநாடு தொகுதியில் வெற்றியை பறிகொடுத்தார். அதேபோல் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட பா.வளர்மதி, அண்ணாநகர் தொகுதியில் போட்டியிட்ட கோகுல இந்திரா மற்றும் பி.மோகன் ஆகியோர் தோல்வியடைந்தனர்.
கடந்த அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த ஓ.பன்னீர்செல்வம், காமராஜ், செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி, எஸ்.பி.சண்முகநாதன் உள்ளிட்ட14 பேர் மீண்டும் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களுக்கு தற்போதைய அமைச்சரவையில் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் பாப்பிரெட்டிப்பட்டியில் வெற்றி பெற்ற உயர் கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன், பெருந்துறையில் வெற்றி பெற்ற சுற்றுச் சூழல் துறை அமைச்சர் தோப்பு என்.வெங்கடாச்சலம் ஆகியோருக்கு புதிதாக அமையவிருக்கும் அமைச்சரவையில் இடம் அளிக்கப்படவில்லை.
அதிமுக சார்பில் முதலாவது வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில், பழனியப்பனுக்கு இடம் அளிக்கப்படவில்லை. தருமபுரியில் முதல்வர் ஜெயலலிதா பிரசாரத்தை முடித்தப் பிறகே, பாப்பிரெட்டிபட்டியில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட வேட்பாளர் மாற்றப்பட்டு பழனியப்பனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து நடந்த பொதுக்கூட்டத்தில் பழனியப்பனை ஜெயலலிதா அறிமுகம் செய்து வைத்ததார்.












Click it and Unblock the Notifications