ஜெயலலிதாவின் ஆத்மா இருக்கும் வரை ஆட்சியை அசைக்க முடியாது.. எச்சரித்த எடப்பாடி!
ஜெயலலிதாவின் ஆத்மா இருக்கும் வரை இந்த ஆட்சியை யாரும் அசைக்க முடியாது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
பெரம்பலூர்: ஜெயலலிதாவின் ஆத்மா இருக்கும் வரை இந்த ஆட்சியை யாரும் அசைக்க முடியாது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
பெரம்பலூரில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டார்.

அப்போது மக்களிடையே உரையாற்றிய அவர், இந்த அரசை வீழ்த்த நினைப்பவர்கள் தானாக வீழ்ந்து போவார்கள் என அவர் எச்சரித்தார். மேலும் ஜெயலலிதாவின் ஆத்மா இருக்கும் வரை ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
தொண்டர்கள் விசுவாசத்துடனும், தியாகத்துடனும் இருக்க வேண்டும் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்தார்.












Click it and Unblock the Notifications