கமல் பேச்சைக் கேட்க ராமநாதபுரத்தில் திரண்ட லட்சம் பேர்!
கமல் பேச்சை கேட்க அலைக்கடலென திரண்டு வந்திருக்கும் மக்கள் வெள்ளம்.
Recommended Video

ராமராதபுரம்: கமல்ஹாசன் பேச்சை கேட்பதற்காக ராமநாதபுரத்தில் திரண்டு மக்கள் வெள்ளமாக காட்சி அளிக்கின்றனர்.
கலாம் வீட்டில் இன்று அரசியல் பயணத்தை கமல் தொடங்கினார். அப்போது ரசிகர்கள் உள்பட வெகு சிலரே அங்கு திரண்டிருந்தனர்.
இதையடுத்து மீனவர்களை சந்தித்து கமல் உரையாடினார். அப்போது அவர் பேசிய பேச்சுகள் பெரும் வெளிவரத் தொடங்கியது.

கலாமுக்கு மரியாதை
இதைத் தொடர்ந்து அப்துல் கலாம் நினைவிடத்தில் கமல் மரியாதை செலுத்த சென்றார். அப்போது முதல் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. வழிநெடுகிலும் மக்கள் அலை அலையாக திரண்டவண்ணம் இருந்தனர்.

அரண்மனை முன்பு பேச்சு
அப்போது ராமநாதபுரத்தில் உள்ள அரண்மனை முன்பு பேசுவதாக அறிவிப்பு வெளியானதை அடுத்து அங்கு கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கானோர் திரண்டனர்.

நட்சத்திரம்
அப்போது அவர் ரத்தின சுருக்கமாக கமல் பேசுகையில் ராமநாதபுரத்தில் என் சித்தப்பா ஆராவமுதன் இருந்தார். இன்னும் மக்கள் அதே அன்போடு இருக்கின்றனர். இதுவரை என்னை சினிமா நட்சத்திரமாக பார்த்தீர்கள். இனிமேல் நான் சினிமா நட்சத்திரம் அல்ல.. உங்கள் வீட்டு விளக்கு.

நீங்கள்தான் ஏற்ற வேண்டும்
என்னை பொத்தி பாதுகாக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. அந்த விளக்கை நீங்கள்தான் ஏற்ற வேண்டும் என்றார் கமல். இதையடுத்து கமலின் சொந்த ஊரான பரமக்குடியில் பொதுக் கூட்டத்தில் பேசவுள்ளார். அங்கும் இதை விட ஏராளமான கூட்டம் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

மக்கள் தலை
இன்று மாலை மதுரையில் கட்சியின் பெயரை கமல் அறிவிக்கும் பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமான தற்போதுள்ள அரசியல்வாதிகளுக்கு மாற்று ரஜினி, கமல் என்று நினைப்பதால் முதலில் முந்திக் கொண்ட கமலின் கொள்கைகளை கேட்க பொதுமக்கள் மட்டுமல்லாமல் தமிழகமே ஆர்வமாக உள்ளது.












Click it and Unblock the Notifications