ஜல்லிக்கட்டு விழா.. அதிரும் அவனியாபுரம்... அதிகாலையிலேயே காண குவிந்த பொதுமக்கள்!!
அவனியாபுரத்தில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இன்று ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதனை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டுகளித்து வருகின்றனர்.
மதுரை: அவனியாபுரத்ததில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பல தடைகைள தாண்டி ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைப்பெற்று வருவதால் அதனை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டுகளித்து வருகின்றனர்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த உச்சநீதிமன்றம் கடந்த 3 ஆண்டுகளாக தடைவிதித்திருந்தது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் நடைபெற்ற மாணவர்கள் புரட்சிக் காரணமாக தமிழக அரசு குடியரசு தலைவர் ஒப்புதலுடன் சட்டசபையில் சட்டம் இயற்றியது.
இதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டு சட்டம் அரசிதழிலிலும் வெளியிடப்பட்டது. இந்நிலையில் உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் இன்று நடைபெற்று வருகின்றன.

அதிகாலை முதலே குவிந்த மக்கள்
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுவதால் ஆயிரக்கணக்கான அவனியாபுரத்தை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் அதிகாலை முதலே அவனியாபுரம் பகுதியில் திரண்டனர்.

விழாக்கோலம் பூண்ட அவனியாபுரம்
பலத்த பாதுகாப்புகளுக்கிடையே ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் அப்பகுதியே விழாக்கோலம் பூண்டுள்ளது.

தடைகளை தாண்டி சீறிவரும் காளைகள்
பல்வேறு தடைகளை தாண்டி வாடிவாசல் வழியாக சீறிவரும் காளைகளை மாடுபிடி வீரர்களும் உற்சாகத்துடன் தழுவி வருகின்றனர். காளைகளை அடக்கும் வீரர்களுக்கும், வீரர்களை திணற வைக்கும் காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

நிரம்பி வழியும் கூட்டம்
இந்த வீர விளையாட்டை காண ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் அவனியாபுரத்தில் குவிந்துள்ளனர். கேலரிகளில் கூட்டம் நிரம்பி வழிவதால் அருகில் உள்ள கட்டடங்களில் ஏறி நின்று மக்கள் ஜல்லிக்கட்டை கண்டுகளித்து வருகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications