For Quick Alerts
For Daily Alerts
Just In
ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிடும் தீபாவிற்கு கொலை மிரட்டல்.. தேர்தல் அலுவலகத்தில் புகார்
ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபாவிற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை: வரும் 12ம் தேதி ஆர்.கே. நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 62 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
திமுக சார்பில் மருது கணேஷ், அதிமுக அம்மா கட்சி சார்பில் டிடிவி தினகரன், அதிமுக புரட்சித் தலைவி அம்மா கட்சி சார்பில் மதுசூதனன், சிபிஎம் சார்பில் லோகநாதன், பாஜக சார்பில் கங்கை அமரன் ஆகியோர் போட்டியிட்டு தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதே போன்று தேர்தல் ஆணையத்தால் படகு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள தீபாவும் காலை மாலை என இருவேலையும் படகு பொம்மையை கையில் வைத்துக் கொண்டு தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், தீபாவிற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பில் தண்டையார் பேட்டையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளிக்கப்பபட்டுள்ளது.
Comments
English summary
MGR Amma Deepa Peravai candidate Deepa was threatened to kill, complaint was given to election office at Thantaiyar pettai.
Story first published: Tuesday, April 4, 2017, 17:57 [IST]