மிரட்டும் டெங்கு காய்ச்சல்.. இன்று காலையிலேயே அடுத்தடுத்து 5 பேர் பலி
டெங்கு காய்ச்சலால் இன்று காலையிலேயே அடுத்தடுத்து 3 மாணவிகள் மற்றும் 2 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

கரூர்: டெங்கு காய்ச்சலால் இன்று காலையிலேயே அடுத்தடுத்து 3 மாணவிகள் மற்றும் 2 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும் டெங்கு காய்ச்சல் குறைந்த பாடில்லை.
டெங்கு காய்ச்சலால் ஏற்படும் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. அதிகரிக்கும் உயிரிழப்புகளால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

திருச்சி மருத்துவமனையில் சிகிச்சை
கரூர் மாவட்டம் மணவாசி கிராமத்தைச் சேர்ந்த பூஜா என்ற சிறுமி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். திருச்சி அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.

மாணவி பூஜா பலி
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுமி பூஜா உயிரிழந்தார். பூஜாவுக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்று குற்றம்சாட்டி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

உடலுடன் சாலை மறியல்
டெங்குவால் உயிரிழந்த சிறுமியின் உடலை கரூர் - திருச்சி நெடுஞ்சாலையில் வைத்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

மாணவிக்கு வைரஸ் காய்ச்சல்
மதுரை மாவட்டம் பாலமேடு பகுதியை சேர்ந்த 7ஆம் வகுப்பு மாணவி மேனகா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக மதுரை அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.

மாணவி உயிரிழப்பு
இந்நிலையில் சிகிச்சைப்பலனின்றி மாணவி மேனகா உயிரிழந்தார். மாணவி உயிரிழந்ததால் அப்பகுதியில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.

லேப் டெக்னிஷியன் மாணவி உயிரிழப்பு
மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு டெங்கு முகாமிற்கு வந்த லேப் டெக்னீஷியன் பயிற்சி மாணவி வினித்ரா டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளார். மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியில் மாணவி வினித்ரா இரண்டாம் ஆண்டு படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2 இளைஞர்கள் உயிரிப்பு
திருவண்ணாமலை அருகே 2 இளைஞர்கள் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர். சு.கம்பப்பட்டியை சேர்ந்த மணிகண்டன், கெங்கம்பட்டி அராபத்
உயிரிழந்துள்ளனர். மணிகண்டன் சென்னை அரசு மருத்துவமனையிலும் புதுவை ஜிப்மரில் அராபத்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications