9 இந்து முன்னணித் தலைவர்களைக் கொல்ல 27 பேர் நியமனம்.. மிரட்டல் கடிதம்

Subscribe to Oneindia Tamil

Threatening letter received at HM office
சென்னை: இந்து முன்னணி அமைப்பின் தலைவர்களைக் கொலை செய்யத் திட்டமிட்டிருப்பதாகவும், 9 பேருக்கு குறி வைத்துள்ளோம். இதற்காக 27 பேர் சென்னையில் ஊடுறுவியிருப்பதாக சென்னையில் உள்ள இந்து முன்னணி அலுவலகத்திற்கு ஒரு கடிதம் வந்துள்ளது. இதுகுறித்து போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது. போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் இந்து முன்னணி தலைமை அலுவலகம் உள்ளது. அங்கு நேற்று கடிதம் ஒன்று வந்தது. அதில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து உடனடியாக போலீஸுக்குத் தகவல் போனது. கடிதம் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பாட்ஷா என்பவர் பெயரில் அந்தக் கடிதம் எழுதப்பட்டிருந்தது. அதில் கூறப்பட்டிருப்பதாவது....

எனது பெயர் பாட்ஷா, நான் சில தீவிரவாத இயக்கங்களால் மூளைச்சலவை செய்யப்பட்டு வாழ்க்கையைத் தொலைத்தவன். இந்து இயக்க நிர்வாகிகளை கொலை செய்த நபர்கள் கைது செய்யப்பட்டுவிட்ட நிலையில், தமிழகத்தில் மேலும் 9 இந்து இயக்கத் தலைவர்களை கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

சென்னைக்கு இதற்காக 27 பேர் வந்துள்ளனர். இவர்கள் சென்னை, தாம்பரம், திருவள்ளூர் போன்ற இடங்களில் தங்கியுள்ளனர். இந்து இயக்கத் தலைவர்களைக் கடத்தி கொலை செய்ய அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

குறிப்பாக தாம்பரத்தில் 4 பேரை பின்தொடர மட்டும் 5 பேர் தங்கியுள்ளனர். மேலும் இவர்கள் சென்னையில் சில இடங்களில் வெடிகுண்டு வைக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

இவர்களுக்கு சில இயக்கத் தலைவர்கள் உதவி செய்து வருகின்றனர். இந்தக் கடித்ததை சாதாரணமாக நினைக்க வேண்டாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து தற்போது போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+