அழகிரியைச் சந்தித்து ‘ஹேப்பி பர்த்டே டூ யூ’ கூறிய 3 தி.மு.க. எம்.பி.கள்...
மதுரை: தி.மு.க.,விலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.,அழகிரியை மூன்று தி.மு.க. எம்.பி.,க்கள் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளனர்.
திமுத தலைவர் கருணாநிதி தனது மூத்த மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகிரியை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கினார். இதனால் தி.மு.க.வில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
இந்நிலையில் அழகிரியின் 63வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறுது. இதனை தங்களது பலத்தை காட்டும் விழாவாக கொண்டாட ஏற்பாடு செய்து வருகிறார்கள் அழகிரியும், துரை தயாநிதியும்.

இந்த சூழ்நிலையில், தி.மு.க. எம்.பி.க்களான நெப்போலியன், கே.பி., ராமலிங்கம் மற்றும் ரித்திஷ் ஆகியோர் நேற்று அழகிரியை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நெப்போலியன், " நான் அமெரிக்காவில் இருந்தபோது கசப்பான சம்பவங்கள் நடந்து விட்டன. அண்ணனை சந்தித்து வாழ்த்து சொன்னேன். அவர் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன் " என்று கூறினார்.
ரித்திஷ் எம்.பி., கூறுகையில், "தென் மாவட்டம் என்றால் அண்ணன் என்ற அளவுக்கு வளர்ந்துள்ளது" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications