திருச்சி திமுக மாநாட்டில் ஓய்வுபெற்ற ஆசிரியர் உட்பட 3 திமுக தொண்டர்கள் மரணம்!

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திமுக வரலாற்றில் சாதனை படைத்த திருச்சி மாநாட்டு வளாகத்திலேயே 3 தொண்டர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியில் 2 நாட்கள் நடைபெற்ற திமுகவின் மாநில மாநாட்டில் பல லட்சக்கணக்கான தொண்டர்கள் மாநிலத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் வந்து குவிந்திருந்தனர்.

இவர்களில் சேலம் தம்மம்பட்டியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் நடராஜன் (வயது 70), தருமபுரி மாவட்டம் பாலக்கோர்டு ஸ்ரீகாரகூர் கிராமத்தை சேர்ந்த காமராஜ் (வயது 50), கரூர் மாவட்டம் தான்தோன்றிமலையைச் சேர்ந்த டி. கிருஷ்ணன் (வயது 55) ஆகியோர் மாநாட்டு வளாகத்திலேயே உயிரிழந்தனர்.

Three party workers die at DMK conference

ஓய்வுபெற்ற ஆசிரியர் நடராஜன், மாநாட்டு பந்தலில் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து மு.க. ஸ்டாலின், நேரு ஆகியோர் வளாகத்தில் இருந்த தற்காலிக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

காமராஜ், கார் பார்க்கிங் பகுதியில் வாகனத்தில் அமர்ந்தபடியே தலைவர்கள் பேச்சைக் கேட்டு கொண்டிருந்தபடியே உயிரிழந்தார். கிருஷ்ணனும் மாரடைப்பு காரணமாகவே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த மூவரது உடல்களையும் அவர்களது பகுதி கட்சி நிர்வாகிகளுடன் திமுக தலைமை நிர்வாகிகள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+