நெல்லை அருகே அரசு பஸ் - லாரி மோதல்.. குழந்தை உட்பட 3 பேர் பலி
நெல்லை: நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே அரசு பேருந்தும் லாரியும் மோதி விபத்துக்குள்ளானதில் குழந்தை உட்பட 3 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
நெல்லையில் இருந்து அரசு பேருந்து ஒன்று புளியங்குடி நோக்கி சென்றுகொண்டிருந்தது. ஆலங்குளம் அருகே சீதபற்ப நல்லூரை அடுத்த புதூரை அருகே வந்தபோது கேரளாவில் இருந்து நெல்லைக்கு சிமெண்ட் மூட்டைகள் ஏற்றி வந்த லாரி, அதி வேகமாக வந்து அரசு பஸ் மீது மோதியது. இதில் பஸ் அப்பளமாக நொறுங்கியது.

இதில் ஒரு வயது பெண் குழந்தை உள்பட 3 பேர் சம்பவ இடத்திலே பரிதாபமாக பலியாகினர். விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 17 பேர் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு மாவட்ட எஸ்.பி.,விக்ரமன் தலைமையில் சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். லாரி டிரைவரும் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர்களை நெல்லை கலெக்டர் கருணாகரன் சந்தித்து ஆறுதல் கூறினார். விபத்தில் நெல்லை-தென்காசி சாலையில் நேற்று இரவு 2 மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
-
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
உங்களுக்கு பதவி வேணும்னா.. அப்போ நான் எதுக்கு.. பிரேமலதாவிடம் பொங்கிய சுதீஷ்.. என்ன நடந்தது? -
எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக -
கடவுளே.. பும்ராவே.. வான்கடே மைதானத்தில் பிசிசிஐ சிலை வைக்கணும்.. தெறிக்கும் ரசிகர்களின் மீம்ஸ்! -
அவரு மட்டும் வரல.. அவங்களையும் கூட்டிட்டு வந்திருக்காரு! விஜய் செயலால் டென்ஷனான தவெகவினர்! -
விண்ணிலிருந்து.. பாய்ந்து வந்த அஸ்திரம்! ஒரே நொடியில் ஈரானின் எதிர்காலமே மாறிவிட்டது.. என்ன நடந்தது? -
இனிமேல் சர்ச்சில் பேசாதப்பா.. விஜய் - திரிஷா செயலால்.. கோபம் அடைந்த உறவுகள்? பரபரப்பு போஸ்ட்! -
கோவையில் புதிய வீடு கட்டிய உரிமையாளருக்கு அரசு ஊழியர் தந்த ட்விஸ்ட்.. மறக்க முடியாத சம்பவம்












Click it and Unblock the Notifications