சேலம் கோட்டத்தில் 3 ரயில் நிலையங்கள் மூடப்படுகிறது.. ரயில்வே அறிவிப்பு
சேலம் கோட்டத்தில் 3 ரயில் நிலையங்கள் மூடப்படுவதாக ரயில்வேத்துறை அறிவித்துள்ளது.
Subscribe to Oneindia Tamil
சேலம்: கோட்டத்தில் 3 ரயில் நிலையங்கள் மூடப்படுவதாக ரயில்வேத்துறை அறிவித்துள்ளது.
ஒரு நிலையத்தில் இருந்து ஒரு நாளைக்கு குறைந்தது 25 பயணிகளாவது பயணிக்க வேண்டும். அதற்கு குறைவான எண்ணிக்கையில் பயணிக்கும் ரயில் நிலையங்கள் மூடப்படும்.

இந்நிலையில் சேலம் கோட்டத்தில் மிக குறைந்த அளவு பயணிகளால் பயன்படுத்தப்பட்ட ரயில் நிலையங்களை மூட ரயில்வே முடிவு செய்துள்ளது. அதன்படி சேலம் - கரூர் மார்கத்தில் உள்ள புதுச்சத்திரம், லட்டிவாடி ஆகிய இரண்டு ரயில் நிலையங்கள் மூடப்படுகின்றன.
இதேபோல் கரூர் - திருச்சி தடத்தில் உள்ள மேக்குடி ரயில் நிலையம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் நிலையங்கள் வரும் 19 ஆம் தேதி முதல் மூடப்படும் என அறிவிக்ப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications