ஜெயலலிதா மரணத்துக்கான மூன்று முக்கிய காரணங்கள்.. அப்பல்லோ அறிக்கை சொல்வது என்ன?
சென்னை: ஜெயலலிதா மரணத்துக்கான மூன்று முக்கிய காரணங்களை அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ளது. இதய கீழறையில் ஏற்பட்ட நடுக்கம் உள்ளிட்டவையே ஜெயலலிதா மரணத்துக்கு வழி வகுத்தன என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனயில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவரது மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்ட நிலையில் அப்பல்லோ, எய்ம்ஸ் மற்றும் தமிழக அரசின் கூட்டறிக்கை இன்று வெளியிடப்பட்டது.
(ஜெ. சிகிச்சை: தமிழக அரசு வெளியிட்ட அப்பல்லோ மருத்துமனை. எய்ம்ஸ் மருத்துவர்களின் அறிக்கைகள்)
அதில் ஜெயலலிதா மரணத்துக்கு இதயத்தின் கீழறையில் ஏற்பட்ட நடுக்கம், இதயத்தில் ஏற்பட்ட நோய் தொற்று மற்றும் தொடர் மூச்சுத் திணறல் ஆகியவையே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று காரணங்களால் தான் ஜெயலலிதாவின் மரணத்துக்கு வழிவகுத்தது என்று அப்பல்லோ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.